மண்ணை கல்லாக்கி
கல்லை சிலையாக்கி
சிலையை பேசவைக்கும்
சிந்திக்க வைக்கும்
மகா வித்தகன் ...
புல் பூண்டு முளையா
பொட்டல் தரையிலும்
விதைத்து பயிர் செய்யும்
வித்தைகள் தெரிந்தவன்.
கதை கவிதை, நாடகமென
கலை பல கற்றவன்- பிறர்
கற்றிட வகை செய்திட்ட
கலைஞன் அவன்...
அரசுப்பணி யோடு- சிவப்பு
அரசியல் பணி செய்து
அகிலம் மாறிட, புரட்சி மலர
அவனி சிவந்திட உழைத்தவன்..
அன்பு அரவனைப்பு
ஆனந்தம் ஆவேசம் சினமென
எதனையும் மறைக்கா
சிறு குழந்தையவன்...
அவன் தான் மனிதன்
அவன் ஒரு கலைஞன்
அவன் ஒரு புரட்சியாளன்
அவன் பெயர் தானே
கந்தர்வன்.. கந்தர்வன்...












சிறப்பு சிறப்பு 🎉
ReplyDelete