சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 1 May 2026

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும்.

அதேபோல பல்வேறு தொலைக்காட்சிகளில் வரக்கூடிய நிகழ்வுகள், விவாதங்கள், தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகள், சமூக ஊடகங்களில் வரக்கூடிய கருத்துக்கள், எல்லாவற்றையும் பார்க்கும்போது வழமையான தேர்தல், அரசியல் நடவடிக்கைகளை தாண்டி இத்தேர்தலில் கண்ணுக்குத் தெரியாத பல்வேறு மாற்றங்கள் நடந்திருக்கலாம். நடைபெற்றது அல்லது நடைபெறவில்லை என்று ஆணையிட இயலாதவாறு ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. தேர்தல் முடிவுகளை எண்ணிப் பார்த்த பிறகு தான் உண்மையான நிலவரம் தெரியும் ஆனால் அதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு மிகப்பெரிய பாடம் காத்திருக்கிறது. அதாவது எச்சரிக்கை என்று கூட சொல்லலாம். 

இதுவரை உலகம் கண்டு வழமையான அரசியல் முறை ஒரு அரசியல் கட்சி ,அதற்கென்று ஒரு கட்டமைப்பு, அதற்கென்று கொள்கையோ, திட்டமோ, பெரிதாகவோ, சிறிதாகவோ ஏதோ ஒன்று அதை வைத்து மக்களிடையே இயக்கங்கள், பிரச்சார பயணம் செய்து அதன் அடிப்படையில் தேர்தல்களை சந்தித்து தங்களை வளர்த்துக் கொள்கிறோம். அது வலதுசாரி சிந்தனை ஓட்டமோ அல்லது இடதுசாரி சிந்தனை ஓட்டமோ அல்லது மையப் போக்கோ ஏதேனும் ஒரு திசை வழியோடு செயல்பட்டதை தான் வரலாறு கண்டிருக்கிறது. 

ஆனால் அந்த மாதிரி எந்த விதமான திசையோட்டமும் இல்லாமல் ஒரு அமைப்பு ரீதியான செயல்பாடுகள், கொள்கைகள், இயக்கங்கள் ஏன் பிரச்சாரம் கூட எதுவுமே ஒழுங்காக செய்யாமல் ஒரு கட்சி 10 சதவீதம் 20 சதவீதம் ஏன் ஆட்சியை கூட கைப்பற்றும் என்றெல்லாம் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. எல்லாவற்றையும் விட ஊடக வெளிச்சங்கள், கூச்சல்கள் மிக அதிகமாக உள்ளன.

 அதை பெரிதாக நம்பக்கூடிய போக்கு கிட்டத்தட்ட எல்லார் மனதிலும் ஆழமாக பதிந்து விட்ட ஊடகங்கள் சமூக ஊடகங்கள் செய்திருக்க கூடிய தில்லு முல்லு பிரச்சாரங்கள்.

 ஒருவேளை அம்மாதிரியான தேர்தல் மாற்றங்கள், நிகழ்வுகள் மூலம் விஜய்யின் தவேக வாக்குகள் பெற்றால் அது ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. 

அரசு, ஆளும் கட்சியின் அதிகார திமிர், எதிர் கட்சிகளின் செயலற்ற நிலை, சனநாயக செயல்முறைகள் மீதான அவநம்பிக்கை, ஊழல் போன்ற காரணங்களால் அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து விலகி செல்வாக்கிழந்து வருகின்றன. 

உலகம் முழுக்க கார்ப்பரேட்டுகள் சமூக ஊடகங்களின், ஊடகங்கள் மூலமாகவும் தாங்கள் விரும்பும் திசை வழியாக இளைஞர்களை கொண்டுசெல்ல ஜென் புரட்சிகளை நடத்தி அரசுகளின் நிலைத்தன்மையை அசைக்கின்றனர் அல்லது புதிய கட்சிகளை உருவாக்கி ஊடக விளம்பரம் மூலம் அரசுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். நேபாளத்தில் நடத்திய புரட்சி ஆட்சி மாற்றத்தில் முடிந்தது. 

இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் அரசு கவிழ்ந்து அவ்வாறே... நம் நாட்டில் கூட அன்னா ஹசாரே போன்ற திடீர் காந்திய வேடதாரிகள் மூலம் காங்கிரஸுக்கு முடிவு கட்டியதும், திடீரென உருவான ஆம் ஆத்மி மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தவழியும் அதே.... 

பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களை, மாணவர்களை, அணிதிரட்டி அரசியல் படுத்தி பயிற்சி அளிக்காவிட்டால் சினிமாக்காரர்கள் பின்னாடியோ அல்லது பிற்போக்கு தீய சக்திகள் பின்னாடியும் அணிதிரள வாய்ப்பு உள்ளது. 

திராவிட இயக்கத்தார், இடதுசாரிகள் விழித்துக் கொண்டால் மகிழ்ச்சியே... 


 . 

பூவுலகு காப்போம்.


கடைசி மரம் வெட்டப்படும்போதும், கடைசி மீன் உண்ணப்படும்போதும், கடைசி ஓடை நஞ்சாக்கப்படும்போதும்,
பணத்தை உண்ண முடியாது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மனிதர்களின் முட்டாள்தனத்தை இந்தப் படத்தை விட சிறப்பாக விளக்க முடியாது

நீரின்றி அமையாது உலகு 
உயிர்களின்றி உனக்கேது பெருமை.. 
நீயின்றி நாங்களேது பிரபஞ்சத்தில்
எப்படியாகினும் பிழைத்துவிடு. 
இப்படிக்கு
கிரகங்கள்.. 
 

“ சாலையை விட்டு விலகி, ஒத்தையடிப்பாதையில் செல்... “ 

தயவுசெய்து மரங்களை நடுங்கள், நம்பிக்கையை நடுங்கள் 🌳❤🌳


என்ன நடக்கிறது இந்நாட்டில்?

 இந்த ஆண்டு மே தின கூட்டம் ஒன்றை பார்த்தேன். தமிழகத்தில் உள்ள இரு பொதுவுடமைக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு நூறு பேர் கொண்ட பேரணியை நடத்தி விட்டு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். தலைமை வகித்தவரில் இருந்து சிறப்பு பேச்சாளர் வரை சர்வதேச பிரச்சனை, இந்திய ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கை, மதவெறி கோட்பாடு, மக்களை பிரித்தாலும் சூழ்ச்சிகள், பொதுமக்களுடைய பொருளாதார கோரிக்கைகள் என ஆரம்பித்து உள்ளூர் பிரச்சனைகள் வரை பேசிக் கொண்டே இருந்தார்கள்.  சாலையில் செல்பவர்கள் இவர்களது கூட்டத்தை பொருட்படுத்தவே இல்லை. கூட்டத்தில் இருந்தவர்களும் பெரிதாக கவனித்த மாதிரியும் தெரியவில்லை .

இதை பார்த்த போது ஒரு வரலாற்று நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது இரண்டாம் உலகப் போருக்கு. முன்னால் ஜெர்மனி முதல் உலகப்போரில் தோற்ற அவமானங்கள், பொருளாதார பாதிப்புகள், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து அலுலாடிக்கொண்டிருந்தது. 

மக்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்ற பிரச்சனைகள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன. அங்கிருந்த பொதுவுடமை கட்சியினர் மக்களுடைய பிரச்சினைகளை பற்றி விலாவாரியாக பேசிக் கொண்டிருந்தார்கள். போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. 

ஆனால் மக்களுடைய வறுமையைப் பற்றியோ, வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, பொருளாதார கோரிக்கைகள் பற்றியோ பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், இழந்துவிட்ட ஜெர்மனியப் புகழ், ஆரிய இனத்தின் பெருமை ஆகியவற்றை தூண்டி விட்டுக்கொண்டு ஹிட்லரும் அவரது பரிவாரங்களும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். 

பேச்சு என்றால் சாதாரண பேச்சு அல்ல, மக்களை வெறி கொள்ளச் செய்யும் அளவுக்கு இனவெறிப் பேச்சு. மூலைச்சலவை செய்யும் பேச்சு. 

அப்போது ஆளும் கட்சியினை சேர்ந்த அமைச்சர்களில் ஒருவர் ஊழல் செய்தது பற்றி, அதுபற்றி அரசு நடத்தி வரும் விசாரணைகள் பற்றி பெரிதாக பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஹிட்லருடைய கட்சியை சேர்ந்த கோயபல்ஸ், புளுகுவதற்கு என்றே அவதாரம் எடுத்தவன் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தான். "இது மக்களுடைய காசு. இதை திருடியவன் அமைச்சர். இதை விசாரிப்பதற்கு ஒரு நீதிமன்றம், விசாரணை எல்லாம் அவசியமா? எங்களிடம் அதிகாரத்தை கொடுத்தால் நடுரோட்டில் ஊழல் செய்த மந்திரியை சுட்டுத் தள்ளிவிட்டு இதற்காகவும் தண்டச் செலவை மிச்சப்படுத்துவேன்!." என்று அளந்து விட்டு கொண்டிருந்தார். அவனை  அவன் சார்ந்த கட்சியை, அவனுடைய தலைவனான ஹிட்லரை, யதார்த்தத்திற்கு புறம்பாக வரும் பொய்யாக பேசும் அந்தக் கூட்டத்தை மக்கள் நம்பினார்கள். 

ஹிட்லருடைய கட்சியும் ஆட்சிக்கு வந்தது. தனது கட்சியினரை தற்குறிகளாக ஆக்கி, மக்களுடைய பிரச்சினைகள் எதையும் தீர்க்கவில்லை. மாறாக பிற நாடுகளுடன் சண்டை இழுத்து, யூதர்களை கொன்று குவித்து, பொதுவுடமை கட்சியினரை கொன்று குவித்து, இரண்டாம் உலக போருக்கு இழுத்துச் சென்று, உலகத்தையும் நாசமாக்கி தன்னாட்டையும் நாசமாக்கி நடுத்தெருவில் விட்டுவிட்டு செத்துப் போனார்கள்.

 இப்போது உள்ள கூத்துக்களும் ஞாபகத்துக்கு வந்தது. மக்களுடைய பொருளாதார கோரிக்கைகள், உலக மந்த நிலை, ஈரானை போருக்கு இழுத்து அமெரிக்கா செய்து வரும் அட்டூழியத்தால் உலகம் சந்திக்கும் பிரச்சனைகள், நம் நாட்டில் உள்ள மதவெறிப் போக்குகள், ஜாதிய பிரச்சனைகள் இது போன்ற ஏராளமான பிரச்சனைகள் பற்றி சமூக சிந்தனை உள்ளவர்கள் பொதுவுடமை கட்சியினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திராவிட இயக்கத்தினர் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு செய்து வரும் அநீதி, நிதி ஒதுக்கீடு செய்யும் பாரபட்சம், இந்தி திணிப்பு போன்ற விஷயங்களை பற்றி எல்லாம் நிறைய பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் உள்ளூர், தமிழக, தேசிய, சர்வதேசிய பிரச்சனைகள் பற்றி எதைப் பற்றியும் தெரியாமல் தற்குறித்தனமாக டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்கள். இந்த காசு மந்திரிக்கு போகிறது என்று எந்த விதமான பொது அறிவு இல்லாமல் நடிகர் விஜய் பாட்டு பாடி கூத்தடிக்கிறார். கூட்ட நெரிசலுக்குள் பேருந்தை நுழைத்து மேலும் நெருக்கடியை உண்டாக்கி 41 பேர் சாவுக்கு காரணமாக இருந்துவிட்டு குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஓடிப் போகிறார்கள். உலகில் எந்த பிரச்சினை நடந்தாலும், சமையல் எரிவாயு கிடைக்கவில்லை என்றாலும் திமுக தீய சக்தியே காரணம் என்று உளறி தள்ளுகிறார். ஒப்பாரி வைக்கிறார். 

இன்னொரு புறம் ஈழத் தமிழர் பிரச்சினை மட்டுமே வைத்துக் கொண்டு ஆமைக்கறி எருமை கறி என்று  சீமான் புளுகி கொண்டு மக்களை ஆடு, மாடு மேய்க்கச் சொல்லி பின்னோக்கி இழுத்துச் செல்ல முயற்சி செய்கிறார். 

ஆனால் கொடுமை பாருங்கள். படித்த இளைஞர்களிலிருந்து பல பேர் எந்த எதார்த்தமும் தெரியாமல். வரலாற்று அறிவு, அரசியல் அறிவு, பொது அறிவு எதுவுமே இல்லாமல் இவர்கள் பின்னாடி தற்குறிகளாக ஓடுகிறார்கள். 

உண்மையிலேயே நாம் எந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை.

Thursday, 30 April 2026

ஆட்சிக்கு வரப்போவது யார்?!.

 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பொதுத் தேர்தல்கள் பற்றிய ஆய்வுகளை காண்போம். இது வெறும் தேர்தல் ஆருடமாக அல்லது கருத்துருவாக்கமாக மட்டும் பார்க்காமல் பகுப்பாய்வு செய்து பார்க்கலாம். இத்தேர்தலில் பிரதானமாக இரு அணிகளும் இரு கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக களத்தில் இறங்கியுள்ளனர். 

ஒன்று ஆளும் கட்சியாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஒரு அணியும், அடுத்து அகில இந்திய அண்ணா திராவிடக் கழகத்தின் முதன்மைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியும்,மூன்றாவதாக ஏற்கனவே சில தேர்தல்களை தனியாக சந்தித்த சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் ,நான்காவதாக புதிதாக துவங்கும் கட்சி களம் காணும் திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், இது தவிர நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு பிரிவும், சசிகலா உருவாக்கிய கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது. 

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி  2024 பொதுத் தேர்தலில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 39 இடங்களையும் வென்ற திமுக கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த இந்திய தேசிய காங்கிரசு, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் நீதிக் கழகத்தில் நீடித்தன.திபின்னர் கஹாசன் தலைமையிலான கூட்டணி. வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் காலதாமதம் செய்வதாகவும், திமுகவை ஓரங்கட்டுகிறோம் என்று கூறி, கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், பி. எச். மனோஜ் பாண்டியன், ஆர். வைத்திலிங்கம் ஆகிய மூத்த தலைவர்கள் திமுகவில் இணைந்தனர். 

2023 செப்டம்பர் 25 அன்று, பாரதிய ஜனதா கட்சி (பாசக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. 2024 பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியும், பாசக தலைமையிலான கூட்டணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன, இரண்டுமே மாநிலத்தில் எந்த இடத்தையும் வெல்லவில்லை.2025 ஏப்ரல் 11 அன்று, இரு கட்சிகளும் மீண்டும் ஒரு கூட்டணியை அமைத்தன, இக்கூட்டணியில் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளரானார்.2026 சனவரி 7 அன்று, அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணி. டி. வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுக கூட்டணியில் இணைந்தது.

இறுதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் டி. டி. வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரசு ஜி. கே. வாசன், இந்திய ஜனநாயகக் கட்சி, அனைத்திந்திய பார்வர்டு பிளாக், பசும்பொன் தேசியக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, புதிய நீதிக் கட்சி, தென்னிந்திய பார்வேர்டு பிளாக், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர், தமிழ் மாநில முஸ்லிம் லீக், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளுடன் களம் காண்கிறது. 

2026 மார்ச் 20 அன்று, இராமதாசு தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, வி. கே. சசிகலா தலைமையிலான அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் காண்கிறார். 

 புதிதாக கட்சி துவங்கி களம் காணும் திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே. ஏ. செங்கோட்டையன், மற்றும் சில முன்னாள் அரசியல்வாதிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது 


பொதுவாகவே கீழ் கண்ட காரணிகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன.

*கூட்டணி காரணிகள். 

2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 20,982,088 (45.38%) வாக்குகள் பெற்று 159 இடங்களில் வெற்றி பெற்றது. 

 திமுக 188 இடங்களில் போட்டியிட்டு, 17,430,179 வாக்குகள், 37.70சதவீத வாக்குகள் பெற்று 133 இடங்களில் வெற்றி பெற்றனர். 

இந்திய தேசிய காங்கிரஸ்  25 இடங்களில் போட்டியிட்டு, 1,976,527 வாக்குகள், 4.28சதவீத வாக்குகள் பெற்று 18 இடங்களில் வெற்றி பெற்றனர். 

சிபிஐ  6 இடங்களில் போட்டியிட்டு, 504,537 வாக்குகள்,1. 09 சதவீத வாக்குகள் பெற்று 2இடங்களில் வெற்றி பெற்றனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு, 457,763 வாக்குகள், 0.99 சதவீத வாக்குகள் பெற்று 4இடங்களில் வெற்றி பெற்றனர்.

 சிபிஎம் 6 இடங்களில் போட்டியிட்டு, 390,819 வாக்குகள்,0. 85சதவீத வாக்குகள் பெற்று 2இடங்களில் வெற்றி பெற்றனர். 

இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இடங்களில் போட்டியிட்டு, 222,263 வாக்குகள்,0. 48 சதவீத வாக்குகள் பெற்று ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை 

2021 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 18,363,499 (39.71%) வாக்குகளுடன் 75 இடங்களில் வெற்றி பெற்றது. 

 அதிமுக 191 இடங்களில் போட்டியிட்டு, 15,391,055 வாக்குகள், 33.29 சதவீத வாக்குகள் பெற்று 66 இடங்களில் வெற்றி பெற்றனர். 

பாமக 23 இடங்களில் போட்டியிட்டு,1,758,774 வாக்குகள்,3. 80சதவீத வாக்குகள் பெற்று 5 இடங்களில் வெற்றி பெற்றனர். 

பா ஜ க இடங்களில் 20 போட்டியிட்டு, 1,213,670 வாக்குகள், 2.62 சதவீத வாக்குகள் பெற்று 4 இடங்களில் வெற்றி பெற்றனர். 

நாம் தமிழர் கட்சி 234 234 இடங்களில் போட்டியிட்டு, 3,042,307 வாக்குகள், 6.58சதவீத வாக்குகள் பெற்றாலும், ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை . 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், இதர சிறிய கட்சிகளான  கோகுல மக்கள் கட்சி,  மருது சேனை சங்கம்,  விடுதலை தமிழ் புலிகள் கட்சி,  மக்கள் அரசுக் கட்சி,  இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் போன்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு 1,289,276(2.84%) வாக்குகள் கூட பெறவில்லை. 

2021 புதிய கூட்டணியாக மக்கள் நீதி மையம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி,இந்திய ஜனநாயக கட்சி,ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) ஓரு அணியாக போட்டியிட்டனர். 

சென்ற தேர்தலில் திமுக கூட்டணி பலம் அடிப்படையிலும், முந்தைய அதிமுக அரசுக்கு எதிரான ஆளுமை எதிர்ப்பு காரணங்கள், அதிமுக ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாத தலைமை போன்ற காரணங்களால் வெற்றி பெற்றது. 

*ஆளுமை எதிர்ப்பு காரணிகள்-anti incumbency காரணிகள். 

இன்றைய சமூக அமைப்பில் எந்த ஒரு அரசாக இருந்தாலும் மக்களின் முழுமையான நம்பிக்கையை பெற்றோ அல்லது எதிர்ப்பை பெறாமல் ஆள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் மாநில அரசு என்பது மத்திய அரசோடு மோதல் போக்கோடு செயல்படும் போது, ​​நிதி நெருக்கடியிலிருந்து பல்வேறு சட்டப் பிரச்சனைகள் வரை சந்திக்க வேண்டி இருக்கும். பொது மக்களின் எதிர்ப்புகளையும் காண வேண்டி இருக்கும். இது தவிர மாநில அரசின் கொள்கை, நிர்வாக செயல்பாடு நடைமுறை சிக்கல்கள் ஆகியவை ஓரளவு எதிர்ப்பு உணர்வை உண்டாக்கத்தான் செய்யும். அதே நேரத்தில் சில சாதனைகள், மக்களுக்கு செய்யக்கூடிய நலத்திட்டங்கள் அந்த எதிர்ப்புணர்வுகளை மட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு நிர்வாகத்தின் இயல்பான மந்தபோக்கு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நிர்வாக இயந்திரத்தின் ஊழல் நடவடிக்கைகள் மக்களின் வெறுப்புணர்வை அதிகரிக்கத்தான் செய்யும். 

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்ற கழக அரசு மீது மக்களுக்கு சில அதிருப்திகளும் உள்ளன என்பது உண்மை. அரசு இயந்திரத்தில் இயல்பான ஊழல் போக்குகள், உள்ளாட்சிகளில் உள்ள நிர்வாக சீர்கேடுகள், சில வரி உயர்வுகள், பொதுவான விலைவாசி உயர்வு, தொழிலாளர் பிரச்சினைகளில் அரசு எடுத்த நிலைப்பாடுகள், அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வூதியம் தீர்க்காதது போன்ற விடயங்களில் அரசின் மீதான கசப்புணர்ச்சிகள் உள்ளன. அவை எந்த அளவுக்கு தேர்தலை பாதிக்கும் என்பது பரிசீலனைக்குரிய விஷயம். அதே நேரத்தில் அரசின் நலத்திட்டங்கள் அவசியம் எந்த அளவு சமன்படுத்தி உள்ளது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மானாமதுரை காவல் நிலைய அஜித்குமார் மரணம், பல்கலைக்கழக மாணவி கற்பழிப்பு, வேங்கை வயலில் குடிநீரில் கலந்தது போன்ற பல விடயங்கள் அரசின் செயல்பாட்டுக்கு எதிரான கரும்புள்ளிகள் என்றாலும் அரசு மறைக்காமல் உடனடியாக எடுக்கப்பட்ட பாதிப்புகளை சமாளிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால் பொதுவாக இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்கிற அளவுக்கு மக்களின் வெறுப்புணர்வையோ எதிர்ப்புணர்வையோ சந்தித்ததாக தெரியவில்லை. 

 அவ்வாறு திமுகவுக்கு எதிரான ஒரு மனப்பாங்கு உருவாகி இருந்தால், 2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அந்த அணி முழுமையாக வெற்றி அடைந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆக இன்னமும் அதனுடைய கூட்டணி பலமும் மக்களுடைய செல்வாக்கும் கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது என்று கொள்ளலாம். 

*பரிவு சார்ந்த காரணிகள்-அனுதாப காரணிகள். 

இத்தேர்தலில் நடிகர் விஜய் உச்சத்தில் இருக்கும் போது தனது வருமானத்தை விட்டு வந்ததாகவும், ஏராளமான வலிகளை சந்தித்து தேர்தலை சந்தித்ததாகவும் அனுதாபத்தை தேட முயற்சி செய்தார். கரூரில் அவர் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசன் காரணமாக 41 பேர் இறந்ததையும் தனக்கு அனுதாபமாக மாற்ற முயற்சி செய்தார். ஆனால் வெற்றி பெற்றதாக தெரியவில்லை.  இத்தேர்தலில் யாருக்கும் சாதகமான அனுதாப அலை எதுவும் பேசவில்லை என்பது உண்மை

*மதம் சாதியம் சார்ந்த காரணிகள்-மதம்- மற்றும் சாதி அடிப்படையிலான காரணிகள். தமிழகத்தில் மதரீதியான செயற்கை அணி என்பது மிகப் பெரிய அளவில் நடைபெறவிட்டாலும் அதற்கான முயற்சிகளை பாஜக கையில் எடுத்தது. திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றி தொடர்ந்த வழக்கு மதுரை முருகன் மாநாடு போன்று மதப்பிரச்சினைகளை  எந்த அளவுக்கு மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதே நேரம் பொதுவாக ஏராளமான திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியது, திருக்கோயில்கள் சொத்து மீட்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசுக்கு சாதகமான விஷயங்களே. 

அதே போல ஜாதிய ரீதியான அணிசேர்க்கை இந்த ஐந்தாண்டுகளில் நிறைய முயற்சிகள் நடைபெற்றன.அவற்றின் பாதிப்புகளை போற்றிப் பார்க்க வேண்டும். 

*ஊடக காரணிகள் - ஊடக காரணிகள்

தேர்தலில் ஊடகங்கள் அதிகபட்சமாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது என்பது கண்கூடாகத் திரிந்தது அவர்கள் விரும்புகிற போக்கிற்கு தேர்தலில் திசை வெளிப்பட அமைய சகல விதமான வித்தைகளையும் ஊடகங்கள் செய்த உதாரணத்திற்கு தேர்தலை சந்திக்காத அமைப்பு என்பது தனது பலத்தை சிறிதளவும் காட்டாதது அல்லது தனது கொள்கையை எந்த இடத்திலும் பிரதிபலிக்காத விதியை தமிழக ஊடகக் கழகத்திற்கு வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனதா கட்சி நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளுக்கு அவர்களுடைய பலத்தை விட கூடுதலாக கிடைத்தது. அந்த அளவுக்கு பிரதான வெளிச்சத்தை பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் கட்சி பொதுவுடமைக் கட்சிகள் போன்றவற்றின் ஊடகங்கள் செய்திடவில்லை என்பது கண்கூடான வெளிச்சம் குறிப்பாக விவாத மேடைகளில் பாஜக வலதுசாரி பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் அவர்களுக்குக் கொடுக்கும் அளவுக்கு அதிமுக கட்சிகள் ஆதரவு பெற்ற ஊடகப் பிரச்சாரத்திற்கு எதிராக திமுக இரு கட்சிகளும் பல சமூகங்களைச் சார்ந்து இருக்க வேண்டும். ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். இதில் நேர்முறையாக செய்யப்பட்ட விமர்சனங்கள் காட்டிலும் எதிர்மறையான விமர்சனங்கள் தனிமனித அவதூறுகளை மிக அதிகமாக இருந்தன அவை எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இளைஞர்கள் மத்தியில் பாதிப்பை உண்டாக்குகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனினும் இத்தேர்தலில் ஊடக காரணி என்பது மிக முக்கியமாக இருந்தது என்ற உண்மையை மறந்திருக்க கூடாது.

*இதர காரணிகள் - மற்ற காரணிகள்.

இதர காரணிகளாக பார்ப்பது பணம் இந்த தேர்தலில் எந்த அளவுக்கு புகுந்து விளையாடியது என்பதுதான். இதில் பிரதான கட்சிகள் எந்த வகையிலும் குறைச்சல் இல்லாமல் செயல்பட்டன. அவர்களை சார்ந்து நிற்கும் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடைய நிழலில் ஒதுங்கி தேர்தல்களை சந்தித்தார்கள். சில தனிப்பட்ட வேட்பாளர்கள், மிக செல்வம் படைத்தவர்கள், மிக செல்வாக்கு படைத்தவர்கள் வாக்குக்கு பணம் அல்லது பரிசுத்தொகை பரிசு பொருட்கள் என்று ஏராளமாக செலவு செய்யப்பட்டது. ஆனால் அவற்றை சட்டபூர்வமாக யாராலும் குற்றம் சாட்ட முடியாது. 

இத்தேர்தலில் நேர்மறை வாக்குகள் என்று சொல்வதானால் அந்தந்த கட்சிக்கான இயல்பாக விழக்கூடிய நம்பிக்கையின் அடிப்படையில் வாக்குகள். இது ஒரு குறிப்பிட்ட சதவீதம் நிச்சயமாக கிடைக்கும் எந்த சூழ்நிலையிலும் மாறிவிடாத வாக்குகள். 

 அரசின் மீதான நம்பிக்கைக் குறைச்சல் அல்லது அதிருப்தி அந்த ஆத்திரத்தின் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் செயல்படும் வாக்குகள் அல்லது குறிப்பிட்ட கட்சியின் இயல்பான எதிர்ப்பான வாக்குகள் என்பதை எடுத்துக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் திராவிடக் கூட்டணி முன்னேற்றக் கழகம் அதனுடையக் கட்சிகளுக்கான இயல்பான வாக்குகள் இயல்பாகவே கிடைக்கக் கூடியவை. அதேபோல அதிமுக கூட்டணியின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலான வாக்குகள் ஓரளவுக்கு நிரந்தரமானது. அரசின் மீதான எதிர்மறை வாக்குகள் எந்த அளவுக்கு அதிகரித்தது, அந்த அளவுக்கு ஆளுங்கட்சிக்கான வாய்ப்பு குறைவதும் எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பு அதிகரிப்பதும் இயல்பானது. ஆனால் இங்கு அதிமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை பகிர்ந்து கொள்ளப் போகிறவர்கள் யார் என்கிற கேள்விதான் பிரதானமாக எழுகிறது. எந்த அளவுக்கு தவேக வாக்குகள் வாங்குகிறதோ அந்த அளவுக்கு அதிமுக கூட்டணிக்கான வாய்ப்புகள் குறைவே. 

பொதுவாக புதிதாக ஒரு கட்சி வரும்போது அந்த நம்பிக்கையில் ஏற்கனவே எதிர்மறையான சிந்தனைகள் உள்ளவர்கள் அந்த பக்கம் சாய்வது என்பதும், காலப்போக்கில் அந்த எதிர்மறை வாக்குகள் வேறொரு பிரிவிற்கு தான் செல்ல வாக்களிக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக திரு விஜயகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்த போதும் நாம் தமிழர் கட்சி ஆரம்ப காலத்திலும் பெற்ற வாக்குகள் அப்படியே அவரிடம் தங்கி விடவில்லை. அதேபோ போல புதிதாக வந்திருக்கும் தவெக விற்கு செல்ல வாய்ப்புள்ளது.

முடிவுரை. 

 பல்வேறு காரணிகளை அலசி ஆராய்ந்ததில் கூட்டணி பலம் என்பது திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு அதிக சாதகமாகவே உள்ளது அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் சேர்ந்திருந்தாலும் முக்கிய தலைவர்கள் சில பிரிவுகள் பிரிந்து சென்று எதிரணியில் தனியாகவோ நிற்பதால் பெரிய பாதிப்புகளை அவர்களால் அரசு உருவாக்க முடியாது என்கிறது மனோபாவத்திற்கு எதிரான மனப்பாங்கு உருவாக்க செல்வாக்கு ஓரளவு சிதைவினை சரி செய்ய இயலும் காரணிகள் ஊடக காரணிகள் இம்முறை கூடுதலாக புதிதாக உருவான தவேகாவிற்கு நிறைய வெளிச்சத்தை கொடுத்துள்ளது. ஏராளமான செலவுகள் செய்து சமூக ஊடகங்கள் மூலமாக அவர்கள் நிறைய பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அது எந்த அளவுக்கு பாதிப்பு உண்டாக்கும் என்பது உடனடியாக சொல்ல இயலாது. 

மற்ற வகையில் இத்தேர்தல் திமுக அணிக்கு கூடுதல் வாய்ப்பளிப்பதாக அமையும் என தெரிகிறது.

ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கர்களுக்கே சொந்தம்.

உலகில் ஒரு கண்டத்திற்கு இருண்ட கண்டம் என்று பெயர் உண்டு. உண்மையில் அது இருண்ட கண்டம் அல்ல. செல்வங்கள் திரண்ட கண்டம். அந்த செல்வங்களை சூறையாடுவதற்காக நாகரீகமானவர்கள் என்ற பெயரினை கொண்ட காட்டுமிராண்டிகள், அக்கண்டத்தை காலணி ஆதிக்கத்திற்கு உட்படுத்தி, எதிர்த்து போராடியவர்களை காட்டுமிராண்டிகள் என்று பெயரிட்டு, கொன்று குவித்து, அக்கண்டத்தின் தொன்மை, நாகரீகம், திறன்களை எல்லாம் அழித்துவிட்டு இருண்ட கண்டம் என்று பெயரிட்டு சூறையாடினார்கள். 

காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்தாலும், ஒரு கட்டத்தில்  விழித்தெழுந்து தங்கள் சுதந்திரத்திற்காக போராடினார் கள். தங்களுடைய உண்மையான திறன்களை வெளிக்கொணர்ந்து மீண்டும் தங்கள் மண்ணின் பெருமையை உயர்த்திட போராடினார்கள். அப்படி போராடியவர்கள் எல்லாம் காலனிய ஏகாதிபத்திய வாதிகளால் வேட்டையாடப்பட்டார்கள் அவர்கள் கனவுகள் மட்டும் நிறைவேதி இருந்தால் இன்றைக்கு உலகின் மிகச் செல்வம் வாய்ந்த கண்டமாக ஆப்பிரிக்க கண்டம் திகழ்ந்திருக்கும் அந்த தியாகிகளின் பட்டியலை காண்போம்! 

 ஒற்றுமையின் தாக்கத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட முதல் 17 பான்-ஆப்பிரிக்கத் தலைவர்கள்.

இது யார் கச்சிதமானவர் என்பதைப் பற்றியது அல்ல. ஆப்பிரிக்காவை ஒன்றாக இணைக்கும் முனைப்பை யார் ஏற்படுத்தினார்கள் என்பதைப் பற்றியது.

 அவர்களை 3 விஷயங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தினேன் பார்ப்போம். 

1. அவர்கள் கண்டம் தழுவிய நிறுவனங்களை உருவாக்கினார்களா?

2. அவர்கள் மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்காகத் தியாகம் செய்தார்களா?

3. அவர்களின் கருத்துக்கள் அவர்களுக்குப் பிறகும் நிலைத்து நின்றனவா?

1) குவாமே நிக்ரூமா, கானா

நவீன பான்-ஆப்பிரிக்கவாதத்தை ஒரு கொள்கையாகக் கண்டுபிடித்தார். ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பை (OAU) நிறுவினார். "ஆப்பிரிக்கா ஒன்றுபட வேண்டும்" என்று கூறி, அதை உண்மையாகவே கடைப்பிடித்தார். மற்றவர்களுக்கு முன்பே ஆப்பிரிக்க ஐக்கிய நாடுகளை முன்னெடுத்தார். அதற்காகப் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். 1963-ல் நாம் அவர் பேச்சைக் கேட்டிருந்தால், இன்று நாம் ஒரு வல்லரசாக இருந்திருப்போம்.

2) ஜூலியஸ் நியேரேரே, தான்சானியா

 சொன்னதைச் செய்தார். ANC, FRELIMO, MPLA, SWAPO, ZANU போன்ற அமைப்புகளை தேசத்துரோகமாகக் கருதிய காலத்தில் விருந்தளித்தார். 120 பழங்குடியினரை ஒரே மொழியில் ஒன்றிணைத்தார். விருப்பத்துடன் ஓய்வு பெற்றார். ஆப்பிரிக்காவின் சொந்த சித்தாந்தமாக "உஜாமா"வை எழுதினார். ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் (OAU) தார்மீக வழிகாட்டி.

3) முதலாம் ஹைலே செலாசி, எத்தியோப்பியா

நமக்கு ஓர் இல்லத்தை வழங்கினார். 1963-ல் அடிஸ் அபாபாவில் ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பை (OAU) நடத்தினார். நாடுகளின் சங்கத்தில் உரையாற்றிய முதல் ஆப்பிரிக்கர். அத்வாவில் இத்தாலியைத் தோற்கடித்து, ஆப்பிரிக்காவால் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்தார். புலம்பெயர்ந்தோருக்கு நிலம் வழங்கினார். அவர் இல்லாமல், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகம் இருந்திருக்காது.

4) தாமஸ் சங்கரா, புர்கினா பாசோ

நான்காண்டுகள் முழுமையான பான்-ஆப்பிரிக்க நடைமுறை. உணவு தன்னிறைவு. கடன் எதிர்ப்பு. பெண்கள் விடுதலை. சி.எஃப்.ஏ ஃபிராங்கைத் துறந்தார். சார்புநிலை என்பது ஒரு தேர்வு என்பதை நிரூபித்ததால் கொல்லப்பட்டார். "உங்களுக்கு உணவளிப்பவரே உங்களைக் கட்டுப்படுத்துகிறார்" என்பது இப்போது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கொள்கையாகும்.

5) முஅம்மர் கடாஃபி, லிபியா

சர்ச்சைக்குரியவர், ஆனால் ஒற்றுமைக்கு நிதியுதவி அளித்தார். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் 15%-க்கு தனியாக நிதியளித்தார். ஆப்பிரிக்க மத்திய வங்கி, தங்க தினார், ஆப்பிரிக்க செயற்கைக்கோள் ஆகியவற்றை முன்னெடுத்தார். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதிப்படை வீரர்களுக்குப் பணம் கொடுத்தார். நேட்டோ அவர் மீது குண்டு வீசும் வரை ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார். அவரது பணம் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு வலிமையைக் கொடுத்தது.

6) செக்கூ டூரே, கினியா

'இல்லை' என்று முதலில் சொன்னவர். 1958-ல் பிரான்ஸை நிராகரித்து, கண்ணியத்துடன் கூடிய வறுமையைத் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு விடுதலைப் போருக்கும் உத்வேகம் அளித்தார். லுமும்பா, கப்ரால், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகியோருக்கு ஆதரவளித்தார். இறையாண்மை சாத்தியம் என்பதை நிரூபித்தார். அதற்காகப் பணம் கொடுத்தார், ஆனால் நெருப்பைப் பற்றவைத்தவரும் அவரே.

7) கென்னத் கவுண்டா, சாம்பியா

முன்னணி நாடுகளின் நில உரிமையாளர். நிறவெறி ஆட்சி அவர்களைக் கொல்ல விரும்பியபோது, ​​மண்டேலா, முகாபே, மச்செல் ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்தார். தெற்கு ஆப்பிரிக்காவை விடுவிப்பதற்காக ஜாம்பியாவின் செப்புப் பொருளாதாரத்தை மூழ்கடித்தார். "ஒரே ஜாம்பியா, ஒரே தேசம்" என்பது "ஒரே ஆப்பிரிக்கா" என்பதற்கான வரைபடமாக மாறியது.


8) சமோரா மச்செல், மொசாம்பிக்

பிராந்தியத்திற்காக உயிர்நீத்தார். IMF-ஐ ஏற்க மறுத்தார். அவரது விமானம் "விபத்துக்குள்ளாகும்" வரை ANC தளங்களுக்கு ஆதரவளித்தார். "சர்வதேச ஒற்றுமை என்பது தர்மம் அல்ல, அது ஒரு கடமை" என்று கூறினார். FRELIMO-வின் வெற்றி, இனவெறிக் கொள்கையை பேச்சுவார்த்தை நடத்தக் கட்டாயப்படுத்தியது.


9) பேட்ரிஸ் லுமும்பா, காங்கோ ஜனநாயகக் குடியரசு

67 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். தாக்கம்: 60 ஆண்டுகள். அவரது கொலை நவ-காலனித்துவத்தை அம்பலப்படுத்தியது. பொருளாதார சுதந்திரத்திற்கான முழக்கமாக காங்கோவை மாற்றினார். ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு சுரங்க ஒப்பந்தமும் இன்றும் அவரது ஆவியால் மதிப்பிடப்படுகிறது: "இதற்கு யார் உரிமையாளர்?"

10) பேரரசர் இரண்டாம் மெனெலிக், எத்தியோப்பியா

அட்வா 1896. ஒரு ஐரோப்பிய இராணுவம் நசுக்கப்பட்டு, காலனித்துவம் தலைகீழாக மாற்றப்பட்ட ஒரே நிகழ்வு இதுவாகும். எத்தியோப்பியாவை இறையாண்மையுடன் வைத்திருந்தார். "எத்தியோப்பியா"வை உலகெங்கிலும் கறுப்பின மக்களின் சுதந்திரத்தின் சின்னமாக மாற்றினார். கார்வி, செலாசி, ராஸ்டாஃபாரி அனைவரும் இங்கிருந்துதான் தொடங்குகிறார்கள்.

11) நாம்டி அசிகிவே, நைஜீரியா

ஆப்பிரிக்காவின் ஜிக். அரசியலுக்கு முன்பு பான்-ஆப்பிரிக்கனிசத்தைப் பரப்ப பத்திரிகைத் துறையைப் பயன்படுத்தினார். நிக்ரூமாவுக்கு வழிகாட்டினார். மேற்கு ஆப்பிரிக்கக் கூட்டமைப்பிற்காகப் போராடினார். "ஆப்பிரிக்காவின் மகத்துவம் இல்லாமல் நைஜீரியாவின் மகத்துவம் அர்த்தமற்றது" என்று நம்பினார்.

12) எலன் ஜான்சன் சிர்லீஃப், லைபீரியா

பான்-ஆப்பிரிக்கனிசத்திற்கும் மகள்கள் உண்டு என்பதை நிரூபித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாட்டுத் தலைவர். குழந்தை வீரர்கள் இருந்த நிலையிலிருந்து ஐ.நா. அமைதிப்படைக்கு பங்களிக்கும் நிலைக்கு லைபீரியாவைக் கொண்டு வந்தார். ECOWAS-க்குத் தலைமை தாங்கினார். நோபல் பரிசு பெற்றவர். ஒற்றுமைக்குப் பெண் தலைவர்கள் தேவை என்பதைக் காட்டினார்.

13) ஜான் மகுஃபுலி, தான்சானியா

 இறையாண்மைக்கான புல்டோசர். ஊழல் நிறைந்த சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்தார். தான்சானியப் பணத்தில் SGR-ஐக் கட்டினார். 4 ஆண்டுகளாக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளவில்லை. கோவிட் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடி இறந்தார். "தான்சானியா முதலில்" என்றாலும், "ஆப்பிரிக்கா பிச்சை எடுப்பதை நிறுத்த வேண்டும்" என்பதே அதன் பொருள்.

 14) ஸ்டீவ் பிகோ, தென்னாப்பிரிக்கா

முதலில் மனதை விடுவித்தார். "கறுப்பின உணர்வு" போராட்டத்தின் ஆன்மாவாக மாறியது. 30 வயதில் கொல்லப்பட்டார், ஆனால் அவரது சிந்தனை ஒவ்வொரு நகரத்தையும் ஆயுதபாணியாக்கியது. தங்களைத் தாங்களே வெறுக்கும் மக்களை ஒன்றிணைக்க முடியாது. அதை அவர் சரிசெய்தார்.

15) கிறிஸ் ஹானி, தென்னாப்பிரிக்கா

விடுதலைக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான பாலம். புரட்சியைத் தடுக்க படுகொலை செய்யப்பட்டார். நிலமும் செல்வமும் இல்லாத அரசியல் சுதந்திரம் போலியானது என்று கூறிய SACP தலைவர். அவரது மரணம் பேச்சுவார்த்தைகளை கட்டாயப்படுத்தியது. நீதி இல்லாத ஒற்றுமை ஒன்றுமில்லை.

16) ராபர்ட் முகாபே, ஜிம்பாப்வே

விடுதலை நாயகன். நிலச் சீர்திருத்த முன்னோடி. அணிசேரா இயக்கத்தின் மாபெரும் தலைவர். பிற்காலங்களில் அவரது புகழ் மங்கியது, ஆனால் 1980-ல் முகாபே ரோடீசியாவை ஆப்பிரிக்கர்களுக்கு வழங்கினார். பிளேர் மற்றும் புஷ்ஷை எதிர்த்தார். "ஜிம்பாப்வே மீண்டும் ஒருபோதும் காலனியாக இருக்காது."

17) ஹொஸ்னி முபாரக், எகிப்து

எகிப்தை ஆப்பிரிக்காவில் தக்கவைத்தார். 30 ஆண்டுகால ஸ்திரத்தன்மை எகிப்தை ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (AU) ஒரு முக்கியத் தூணாக மாற்றியது. சூடான், லிபியா, பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு மத்தியஸ்தம் செய்தது. அரபு லீக் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு இடையே ஒரு பாலமாக விளங்கியது. நான் ஒரு புரட்சியாளன் அல்ல, ஆனால் ஒற்றுமைக்கு முதிர்ச்சியடைந்தவர்களும் தேவை.

அவர்கள் யாரும் புனிதர்கள் அல்ல. அனைவரும் பேரரசால் தாக்கப்பட்டனர். ஆனால் ஒவ்வொருவரும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினர்: "பழங்குடியினர்" என்பதிலிருந்து "ஆப்பிரிக்கர்கள்" என்ற நிலைக்கு.

பான்-ஆப்பிரிக்கவாதம் என்பது கடந்த கால ஏக்கம் அல்ல. அதுவே இன்று உள்ள ஒரே உத்தி.

குறிப்பு: இந்தத் தரவரிசை, கண்ட ஒற்றுமையின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது, சிறந்த ஜனாதிபதி யார் என்பதை அல்ல. அது வேறு பட்டியல்.

ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கர்களுக்கே சொந்தம்.

குறிப்பு: இந்தப் பட்டியல் 'ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கர்களுக்கே சொந்தம்' என்ற தளத்தின் நிர்வாகி ஒருவரின் தனிப்பட்ட கருத்து.


Wednesday, 29 April 2026

ஒரு மருந்தாளுனரின் நினைவலைகள்.


 எனது இணையர் தான் பார்த்த வீடியோ காட்சி ஒன்றை அனுப்பி வைத்தார். பார்க்க வேடிக்கையாய் இருந்தது. பல நையாண்டி நகைச்சுவைகளை நம் வாழ்நாள் முழுவதும் பார்த்திருக்கிறோம். குறிப்பாக மருந்தாளுனர்கள் மருத்துவர்கள் பற்றிய கேலிச்சித்திரம் அது. 
ஒரு நபர் மருந்து கடையில் (அந்தக் கடையில் ஸ்டேஷனரிகளும் விற்பார்கள் போலிருக்கிறது) சென்று பேனா ஒன்றை வாங்குகிறார். நன்றாக எழுதுகிறதா என்று பார்ப்பதற்காக ஒரு வெள்ளைத் தாளில் கிறுக்குகிறார். இது உலகில் எல்லோருமே செய்யக்கூடிய வேலை தான். புதிதாக கையில் பேனா கிடைத்தவுடன் நன்றாக எழுதுகிறதா என்று பார்ப்பதற்கு கையெழுத்து போடுவார்கள் அல்லது ஏதாவது கிறுக்கிப் பார்ப்பார்கள். கொடுத்தவர் உள்ளே போவார். அடுத்து வந்த பணியாளர் அந்த பேப்பரை எடுத்து வேகமாக அங்கிருக்க கூடிய மருந்துகளை தேடி எடுத்து வைத்துவிட்டு, பில் போட்டு மருந்தை கொடுத்து பணம் கேட்பார். பேனா வாங்க வந்தவர் முழித்து நிற்பார். எதை கிறுக்கினாலும் மருந்தாளுனர் ஒரு மருந்து எடுத்துக் கொடுத்து விடுவார் என்று நையாண்டியாக சொல்லுகிற விஷயமிது. 

ஒரு மருத்துவர் தனது மனைவி மீது மிகவும் அன்பாய் இருப்பார். அவரை மனைவி செய்யக்கூடிய நல்ல விஷயங்கள்  உடனுக்குடனே பாராட்டக்கூடியவர். அன்றைக்கு வீட்டில் காலையில் மனைவி சுட்டுக் கொடுத்த தோசை மிகவும் சிறப்பாக இருந்தது சாப்பிட்டுவிட்டு வேலைக்கு கிளம்பியவர், அவரிடம் தோசைக்கு நன்றி சொல்லவில்லையே என்று தோன்றியது. அவரது மனைவி வெளியே கடைக்கு சென்றிருந்தார். அவசரமாக வெளியே செல்ல வேண்டியதால் ஒரு துண்டு சீட்டில் அன்பே, நீ சுட்டுக் கொடுத்த தோசை மிக சிறப்பாக இருந்தது. நன்றி முத்தங்களுடன் என்று கையெழுத்திட்டு எழுதி வைத்து கிளம்பி விட்டார். அவருடைய மனைவி அந்த சீட்டை பார்த்து அவருடைய கிறுக்கெழுத்து ஒன்றுமே புரியவில்லை. அவருடைய கையெழுத்தை நன்கு புரிந்தவர் மருந்தாளுநர் தானே என்று அவரிடம் துண்டு சீட்டை கொடுத்தார். அவரும் அந்த துண்டு சீட்டைப் பார்த்துவிட்டு உடனே இரண்டு மாத்திரைகளை எடுத்து அனுப்பினார். 

 உண்மையில் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எழுதுகிற சீட்டு அவ்வாறு தான் இருக்கும். சாதாரணமாக மருந்தாளுனரும் அதை பார்த்து மாத்திரைகள் எடுத்து கொடுத்து அனுப்புவார்கள். அதில் மாபெரும் ரகசியம் அடங்கி இருக்கிறது. ஏன் அப்படி புரியாத மாதிரியாக எழுதுகிறார்கள் என்று பெரிய ஆராய்ச்சியே நடத்தலாம். அந்த காலத்தில் எந்த மருந்து என்று மருத்துவருக்கும் மருந்தாளுநருக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று லத்தீன் மொழியில் எழுதுவார்கள். அது அவர்களுக்கு இருவருக்கு மட்டும் தான் புரியும். மருந்து கொடுக்க வேண்டிய முறை பற்றியும் இலத்தினில் தான் எழுதுவார்கள். ஏனெனில் லத்தின் மொழி செத்த மொழி. நடைமுறையில் இல்லாத மொழி. அதில் எழுதினால் மற்றவர்களுக்கு புரியாது. இந்த சங்கேத மொழி ரகசியமாக இருக்கட்டும் என்று எழுதினார்கள். உதாரணத்திற்கு மிக்சர் கார்மினெட்டிவ் (Mixture Carminative)  என்று ஆங்கிலத்தில் உள்ளதை mixtura carminativa மிஸ்டுரா கார்மினேடிவா தான் என்று எழுதுவார்கள். மூன்று வேலைக்கு என்று எழுதுவதை Ter in dier டெர் இன் டை. என்று குறிப்பிடுவார்கள். சாப்பாட்டுக்கு பின் என்றால் போஸ்ட் சிபம் Post cibum என்று எழுதுவார்கள். 

 இந்த மாதிரி ரகசியமாக எழுதுவது என்பதெல்லாம் காலாவதியான விஷயம். அப்புறம் ஏராளமான புதிய புதிய மருந்துகள் எல்லாம் வந்து விட்டன. நோயாளிகளை மருந்தின் பெயரைச் சொல்லி கேட்கக்கூடிய காலமாக மாறிவிட்டது. அதனால் ரகசியம் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. ஒருவேளை இந்த புதிய மருந்துகள் யாருக்கும் புரிய கூடாது என்ற நினைத்து தான் மருத்துவர்கள புரியாத மாதிரி பிரித்து எழுதுகிறார்களோ என்று எண்ணலாம். விஷயம் வேறொன்றும் இல்லை. ஏராளமான கூட்டம் வந்துவிட்டது. நிறைய மருந்துகள் எழுத வேண்டி உள்ளது. காலம் முன்பு வரை அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் மக்கள் இருந்தார்கள். ஏராளமாக கூட்டம் வந்தது. போதுமான மருத்துவர்கள் இல்லை. அதனால் மருத்துவர்கள் வேக வேகமாக எழுதும் போது சுருங்கி சுருக்கெழுத்து கிறுக்கெழுத்தாகவே மாறிவிட்டது. அது மருத்துவருக்கும் மருந்தாளுனர்களுக்கும் மட்டுமே புரியக்கூடிய எழுத்தாக மாறிவிட்டது.

என்னுடைய வாழ்க்கையில் இது மாதிரி நிறைய அனுபவங்கள் உண்டு. நான் தலைமை மருத்துவமனையில் பணியாற்றியபோது அங்கு ஒரு மருத்துவர் இவ்வாறு தான் எழுதுவார். அதை ஆண்டவனால் கூட கண்டுபிடிக்க முடியாது. அப்படி ஒரு எழுத்து. அவருக்கு இன்னொரு பழக்கமும் உண்டு. நோயாளியை அந்த மாத்திரை வாங்கியவுடன் கொண்டு வந்து அவரிடம் காட்டிவிட்டு தான் போக வேண்டும் என்று சொல்லி இருப்பார். அவ்வாறு ஒரு முறை மாத்திரை கொடுத்த போது அந்த நோயாளி  மருத்துவரிடம் சென்று பெற்ற மருந்தினை காட்ட, நான் எழுதியது எவ்வளவு இவன் என்ன குறைத்துக் கொடுத்திருக்கிறான் என்று காச்சு மூச்சு என்று கத்திவிட்டு, என்னை நேரில் அழைத்து கேவலமாக திட்டி விட்டார். நான் கொந்தளித்துப் போனேன். அருகில் இருந்த மருத்துவர் என்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். 
அந்த மருத்துவருக்கு என்னைப் பற்றி ஏற்கனவே தெரியும். மாத்திரை சீட்டில் எந்த குறை இருந்தாலும் உடனே எடுத்து சென்று நான் கையோடு திருத்தி தான் மாத்திரை வழங்குவேன். ஒரு முறை ஒரு மருத்துவர் எழுதுவதற்கு டயசிபம் பதிலாக டிசாக்சின் என மாற்றி எழுதி விட்டார். இரண்டும் வேறு வேறு பயன்பாடு உள்ளவை. உடனே அதை சென்று திருத்தி வந்தேன். அந்த நிகழ்ச்சியின் போது இருந்த மருத்துவர் என்பதால் என்னைப் பற்றி தெரியும். 
நான் கோபத்தோடு அந்த மருந்து சீட்டுடன் , அந்த நோயாளியை கைப்பற்றாக பற்றி அந்த மாத்திரைகளையும் கையில் எடுத்துக் கொண்டு நேரே இணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று விட்டேன் . 
நான் கோபமாக இருந்ததை புரிந்து கொண்ட இணை இயக்குனர் என்னை சமாதானப்படுத்தி என்ன சொல்லுங்கள் என்றார். இணை இயக்குனரிடம் அந்த மருந்து சீட்டை கொடுத்து இதில் என்ன மாத்திரை என்ன எண்ணிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது என்று தயவு செய்து படித்து சொல்லுங்கள் சார் என்றேன். 
அவர் பார்த்துவிட்டு இது என்ன கோழி கிறுக்கியது போல இருக்கிறது. எழுத்தும் புரியவில்லை எண்ணிக்கையும் தெரியவில்லை என்றார்.. இப்படி ஒரு மருந்து சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு அந்த மருத்துவர் என்னை நோயாளி முன்பு அவமரியாதை செய்து விட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கையில், என்னை சமாதானப்படுத்திய மருத்துவர் அந்த அறைக்கு வந்து விட்டார். அவர் இணை இயக்குனரிடம் அவர் கார்த்திகேயன் சாருக்கு கோபமே வராது அவரே கோபப்படும்படியாக அந்த மருத்துவர் திட்டிவிட்டார் என்று வருத்தப்பட்டார். அப்புறம் ஒரு வழியாக பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள். 
அந்த மருத்துவர் என்னை திட்டிய மருத்துவரிடம் ஓய்வறையில் சென்று என்னைப் பற்றி விளக்கமாக சொன்ன பிறகு மறுநாளைக்கு என்னை திட்டிய மருத்துவர் என்னிடம் வந்து வருத்தம் தெரிவித்து விட்டு சென்றார். அதன் பிறகு நாங்கள் மிகவும் நெருங்கிய நட்போடு பழக ஆரம்பித்தோம். அது வேறு விஷயம். 
வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இது உயிரோடு சம்பந்தப்பட்ட விஷயம் எழுதுகிற மருந்து கொடுக்கிறவருக்கும் புரிய வேண்டும் என்று மருத்துவர்கள் உணர்வதில்லை. 
இன்று உலக அளவில் எல்லா நாடுகளிலும் மருந்துகளின் ஜெனரிக் பெயர் தான் பயன்படுத்த வேண்டும் என்று நடைமுறையில் உள்ள போது, இந்தியா மாதிரி நாடுகளில் தான் வியாபார பெயரான ட்ரெய்லர் நேமில் மருந்துகள் விற்கப்பட்டு வருகின்றன. ஒரு மருந்து இன்று சந்தையில் ஆயிரம் விற்பனை பெயரில் உள்ளன என்று இந்த சமுதாயம் என்று உணரப்போகிறது. மருந்துகளின் பெயரை தெளிவாக ஜெனரிக் பெயரில் எழுதப் போகிறார்களோ தெரியவில்லை. பொதுமக்களிடம் திட்டுவாங்கி அவதிப்படுவது மருந்து ஆளுநர் மட்டுமே.

ஆட்சிக்கு வரப்போவது யார்?

 தேர்தல்கள் முடிந்து விட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் வந்து குவிகின்றன. ஆளாளுக்கு ஆரூடம் சொல்கிறார்கள். விஞ்ஞான பூர்வமாக அல்லது லாஜிக்கலாக இன்ன காரணத்துக்காக இப்படி இப்படி வாக்கு விழும் என்று யாரும் ஆராய்ந்து சொல்ல தயாராக இல்லை. இப்போது என்ன சொன்னாலும் பைத்தியக்காரத்தனமாக தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம். 

பூவுலகு காப்போம்



2026 காலநிலை எச்சரிக்கை: யாரும் உங்களுக்குச் சொல்லாத உண்மைகள்...

2026-ஆம் ஆண்டு, பூமியின் காலநிலை முன்பு போல் இருக்காது. விஞ்ஞானிகள் கணித்ததை விட வெப்ப சாதனைகள் வேகமாக முறியடிக்கப்படுகின்றன. பெருங்கடல்கள் அமைதியாக வெப்பமடைந்து வருகின்றன, மேலும் சில மாற்றங்கள் மிகவும் அமைதியாக நிகழ்வதால், பெரும்பாலான மக்கள் அவற்றை ஒருபோதும் கவனிப்பதில்லை. 2026-ஆம் ஆண்டு பூமியின் காலநிலையை வரையறுக்கக்கூடியவை இவைதான் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்; இதில் நமது எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கக்கூடிய அபாயகரமான மற்றும் அதிகம் அறியப்படாத உண்மைகளும் அடங்கும். 2026-ஆம் ஆண்டு, பூமியில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று காலநிலை மாதிரிகள் கூறுகின்றன. அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ந்து வெப்பத்தைத் தக்கவைக்கின்றன. இயற்கையான குளிர்ச்சி சுழற்சிகள் பலவீனமடைந்து வரும் நிலையில், ஒரு சிறிய உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது; அதாவது, வலுவான வெப்ப அலைகள், நீண்ட கோடைக்காலங்கள் மற்றும் ஒரு காலத்தில் பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட பகுதிகளில் சாதனை அளவிலான வெப்பநிலை போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

பூமியின் அதிகப்படியான வெப்பத்தில் 90%-க்கும் மேல் பெருங்கடல் உறிஞ்சப்படுகிறது. 2026-ஆம் ஆண்டுக்குள், கடல் வெப்பநிலை கடல்வாழ் உயிரினங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவளப்பாறைகள் பரவலான வெளுப்பைச் சந்திக்கக்கூடும். மீன்களின் இடம்பெயர்வு முறைகள் மாறும், மேலும் வெப்பமான கடல்கள் கணிக்க முடியாத புயல்களுக்கு வழிவகுக்கும். உருகும் பனியைப் பெரும்பாலான மக்கள் பெரும் சரிவுகளாகவே கற்பனை செய்கிறார்கள். ஆனால், மிகவும் ஆபத்தான இழப்பு அமைதியாகக் கீழிருந்து நிகழ்கிறது. துருவப் பகுதிகளில், வெப்பமான கடல் நீர் பனியாறுகளைக் கீழிருந்து உருக்கி, எதிர்பார்த்ததை விட வேகமாகப் பனிப் படலங்களைப் பலவீனப்படுத்துகிறது. இந்த மறைமுகமான உருகுதல், உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்களை அச்சுறுத்தும் கடல் மட்ட உயர்வுக்கு காரணமாகிறது. 2026-ஆம் ஆண்டுக்குள், தீவிர வானிலை நிகழ்வுகள் இனி தீவிரமானதாக உணரப்படாமல் போகலாம். வெப்ப அலைகள், வெள்ளங்கள், வறட்சி மற்றும் சக்திவாய்ந்த புயல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. ஒரு காலத்தில் நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வாக இருந்த ஒன்று, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடும். உண்மையான ஆபத்து பேரழிவுகள் மட்டுமல்ல, மனிதர்கள் எவ்வளவு அமைதியாகத் தங்களைத் தகவமைத்துக் கொண்டு அவற்றை இயல்பானவையாகக் கருதுகிறார்கள் என்பதுதான்; உயரும் வெப்பநிலை உணவுப் பயிர்கள் வளரும் விதத்தைப் பாதிக்கிறது. வெப்ப அழுத்தம் பயிர் விளைச்சலைக் குறைக்கிறது. கணிக்க முடியாத மழைப்பொழிவு அறுவடையைச் சேதப்படுத்துகிறது. மேலும், வெப்பமான காலநிலை பூச்சிகள் புதிய பகுதிகளுக்கு பரவியது. 2026-ஆம் ஆண்டுக்குள், உணவு அமைப்புகள், குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், அதிகரித்து வரும் அழுத்தத்தைச் சந்திக்கக்கூடும். 

மிகவும் ஆபத்தான காலநிலை மாற்றங்கள் எப்போதும் கண்ணுக்குத் தெரிவதில்லை. கடல் நீரோட்டங்கள், வளிமண்டல அமைப்புகள் மற்றும் மண் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், சூழல் அமைப்புகளை அமைதியாக நிலைகுலையச் செய்யலாம். சில வரம்புகள் மீறப்பட்டவுடன், இந்த அமைப்புகள் எளிதில் மீண்டும் வர முடியாமல் போகலாம். 2026-ல் பூமியின் காலநிலை, ஒரே ஒரு பேரழிவால் வரையறுக்கப்படாது, மாறாக ஒரே நேரத்தில் நிகழும் பல மாற்றங்களால் வரையறுக்கப்படும்.

"எதிர்காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. விழிப்புணர்வு, அறிவியல் மற்றும் செயல்பாடுகள் இன்னும் முக்கியமானவை, எனவே நாம் இப்போது என்ன செய்கிறோம், அதுவே நாளை நாம் வாழப்போகும் கிரகத்தை வடிவமைக்கிறது."

இயற்கைக்கு மனிதர்கள் தேவையில்லை....மனிதர்களுக்கே இயற்கை தேவை. 

தயவுசெய்து மரங்களை நடுங்கள், நம்பிக்கையை நடுங்கள் 

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...