அவர்கள்...
ஒவ்வொருவராக
பிரிந்து சென்றார்கள்...
நாமறியாமலே...
வளர்ச்சியின் பெயரால்,
ஆடம்பரத்தின்பெயரால்,
வேட்டையின் பெயரால்,
நாமழித்த பூவுலகில்...
நாம் வருவதற்கு முன்பே வந்தவர்கள்
பூவுலகின் சொந்தக்காரர்கள்
சத்தமில்லாமல் விடைபெற்றார்கள்...
அவை பிரிந்து செல்வதை நாம் கவனிக்கவில்லை.
அவை ஒரே நாளில் மறைந்துவிடவில்லை.
மெதுவாகப் பிரிந்து சென்றன.
ஒவ்வொரு காடாக.
ஒவ்வொரு நதியாக.
ஒவ்வொரு ஈரநிலமாக.
ஒவ்வொரு கவனக்குறைவான தேர்வாக.
நாம் புதுமைகளை உருவாக்குவதில்
மிகப் பழமையான உறுப்பினர்களை
இழந்து கொண்டிருந்தது இயற்கை...
தேனீ அமைதியாகப் பிரிந்து சென்றது.
தவளை பாடுவதை நிறுத்தியது.
பறவைகள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டன.
ஆற்றிலிருந்து மீன்கள் மறைந்துவிட்டன.
மனிதர்கள் பார்த்துக்கொண்டேயிருந்தான்
விலங்குகள் அழிவை நோக்கி போய்க்கொண்டிருந்தன.
அடுத்த வரிசையில் நிற்பது நாம்தான்.
விழித்தெழா விடிலோ
உயிர்க்கோளம்
சவக்குழியாயிருக்கும்.....

No comments:
Post a Comment