சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 25 June 2026

காடு அவர்களின் வீடு

வெளியூருக்கு விருந்துக்கு சென்று திரும்பி வந்த அணிலாருக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. தான் வசித்து வந்த தனது மரமான வீடு காணாமல் போயிருந்தது யாரோ வெட்டி வீழ்த்தி எடுத்து சென்று விட்டார்கள். அது குழந்தையாக இருந்த காலத்திலிருந்து மகிழ்ந்து திரிந்த வீட்டை நினைத்துப் பார்க்கையில் துக்கம் துக்கமாய் வந்தது. துக்கம் தாங்காமல் கதறி அழ ஆரம்பித்தது. 

அந்த வழியாக வந்த நரியார் அனிலை சமாதானப்படுத்த முயன்றார். சமாதானப்படுத்த ஆள்வந்ததும் அழுகை இன்னும் அதிகமானது. ஒரு வழியாக அழுகையை மட்டுப்படுத்திய நரியார், சிங்கராஜாவிடலாமென ஆறுதல் கூறியது. இருவரும் சிங்கராஜாவின் தர்பாருக்கு வந்து சேர்ந்தார்கள். 


சிங்கராஜாவிடம் கண்ணீரோடு போய் நின்று தனது வீடு காணாமல் போய்விட்டது, யாரோ மனிதர்கள் வெட்டி எடுத்து சென்று விட்டார்கள் என்று கதறி அழ ஆரம்பித்தது. சிங்க ராஜா தன் அருகில் இருந்த  மந்திரி யானையாரிடம் விவரம் கேட்டது. 
மதிமந்திரி யானையாரும் "மனிதர்களுக்கு வேற வேலையே இல்லை. இவ்வாறு  நாம் வசிக்கும் வீடு, நமது உணவு பொருட்கள் என அனைத்தையும் நாசம் செய்து கொண்டு செல்கிறார்கள்"  என்று சோகமாக கூறியது. 

சிங்கராஜா "இதற்கு என்ன தான் செய்வது" என்று கேட்டது. 

அப்போது அங்கிருந்த நாயார் "இது சம்பந்தமாக காவல் நிலையத்திடம் போய் புகார் கொடுக்கலாம்" என்று சொன்னது. 
நாயார் ஏதோ ஒரு காரணத்தால் மனிதர்களை விட்டு துரத்தப்பட்டு இவர்களிடம் அடைக்கலமாக வந்து இங்கேயே தங்கி விட்டார்.
 
இதைக் கேட்டதும் நரியாருக்கு கோபம் வந்துவிட்டது. 

"வெட்டியவர்களே மனிதர்கள் தான் அவர்களிடம் போய் புகார் கொடுக்கச் சொல்கிறாயே. மனிதர்களுடைய காலை நக்கிபிழைத்து உனக்கு புத்தி அப்படியேதான் இருக்கிறது" என்று கோவமாய் சொல்ல , நாயார் பதிலுக்கு சத்தம் போட்டு குறைக்க ஆரம்பித்தார்.

 சிங்கத்திற்கு கோபம் வந்து" என்ன நீங்கள் எல்லாரும் மனிதர்களைப் போல கேவலமாக நடந்து கொள்கிறீர்களே, நமக்கென்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறதே, வெட்கமே இல்லாமல் கத்துகிறீர்களே என்று கர்ஜித்தது.

 உடனே சபை அமைதியானது .
சரி காக்கையார் தான் ஊரெல்லாம் சுற்றி வருகிறார் . அவரிடமே கேட்போம் என்று காக்கையாரிடம் கருத்து கேட்டார்கள் .

காக்கையார் தயக்கமாய் அவர்களிடம் பேச ஆரம்பித்தார் "இங்குள்ள மனிதர்கள் காவல் நிலையம் எல்லாம் வைத்திருக்கிறார்கள். யாராவது பாதிக்கப்பட்டால், வீடு எரித்தால், இடித்தால் அங்கு போய் புகார் செய்யலாம். அங்கும் நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றங்களுக்கு செல்லலாம். குளம், குட்டை, ஏரி, காடெல்லாம் கானாமல் போனால் அங்கு வழக்கு தொடரலாம்" என்று சொன்னது.. 

உடனே ஓநாய் குறுக்கிட்டு "அவர்கள் என்ன காப்பாற்றுவது? அவர்கள் நீதிமன்றங்கள் வைத்திருக்கிற இடமே இயற்கையாய் உள்ள ஏரிகளை விழுங்கிவிட்டு தானே கட்டிடம் கட்டி இருக்கிறார்கள்.மனிதர்கள் வாழும் வீடுகளை காப்பாற்றவே அவர்களால் முடியவில்லை. நம் வீடுகளை, காட்டை எங்கே காப்பாற்ற போகிறார்கள்" என்றது.

அப்போது சிங்க ராஜா கேட்டது" நம்ம ஊரில் உள்ள நீதிமன்றம் அரசாங்கங்கள் மட்டுமே இப்படியா ? உலகெங்கும் எல்லா இடங்களும் இதே மாதிரி கேவலமாக தான் இருக்கிறதா" என்று கேட்டது.

 கழுகுகள் வேகமாய் குறுக்கிட்டு சொன்னார்" நான் ஆகாயத்தில் இருந்து உலகம் பூராம் சுற்றிப் பார்க்கிறேன். உலக அளவில் எல்லா இடங்களிலும் நீதிமன்றங்களெல்லாம் உள்ளன. அரசாங்கங்கள் எல்லாம் ஏன் சர்வதேச நீதிமன்றங்கள் கூட உள்ளன. ஆனால் உலகமெல்லாம் இதே லட்சனம் தான். பல நாடுகளில் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழிக்கிறார்கள். போர்கள் என்ற பெயரில் வீடுகள் நகரங்கள் என எல்லா இடங்களிலும் குண்டு போட்டு அழிக்கிறார்கள்"என்று புலம்பியது. "

இதைக் கேட்ட சிங்கராஜா விரக்தியுடன் ""என்னமோ இங்குள்ள மரம் வெட்டியதற்ககே நாம் இப்படி புலம்புகிறோம். நாடு முழுவதும் வசிக்கும் மனிதர்கள் எல்லாம் மரங்கள் வெட்டி காட்டை அழிக்கும்போது, வீடுகளை நகரங்கள் எல்லாம் அழித்து வருபவர்களிடம் போய் குடியிருக்கும் இடம் போய்விட்டது என்று நீதி கேட்டால் எங்கு கிடைக்கப் போகிறது. சரி இது விஷயமாக என்ன செய்யலாம் என்று யோசிப்போம் "என்று கூறிவிட்டு தப்பித்தால் போதும் என்று சபையை ஒத்தி வைத்து விட்டு சென்று விட்டது. 

 நீதி:மனிதர்களுக்கு, அது வெறும் ஒரு மரம். 

ஆனால் விலங்குகளுக்கு, அது அவர்களின் வீடு. 🌳💔

தூங்குவதற்கான ஓர் இடம்.

ஒளிந்து கொள்வதற்கான ஓர் இடம்.

தங்கள் குட்டிகளை வளர்ப்பதற்கான ஓர் இடம்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் நம்பிய ஓர் இடம்.

பின்னர் ஒரு நாள் காலையில்… அது இல்லாமல் போனது.

நம் வளர்ச்சி, சாலைகள், வீடுகள், மற்றும் தளபாடங்கள் பற்றிப் பேசுகிறோம் — ஆனால் அவருக்குப் பின்னால் அழிக்கப்பட்ட அமைதியான உயிர்களைப் பற்றி அரிதாகவே பேசுகிறோம்.

ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன், நினைவில் கொள்ளுங்கள்:

அங்கே யாரோ ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.

மரங்களைக் காப்பாற்றுங்கள். வீடுகளைக் காப்பாற்றுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள்


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...