ஆடுகள் ஆனந்தமாய் கூடின
மாற்றம் வேண்டும் என்று கூவின
நரியார் கம்பீரமாய் வந்தார்
சுற்றி சுற்றி வந்தார்
சிரித்த முகத்தோடு வந்தார்
அல்லக்கைகள் சத்தமாய் அலறின
மாற்றம் மாற்றம் வேண்டுமென
ஆடுகள் மாற்றமென ஆமோதித்தன.
நரியார் மென்மையாய் கூறினார்
அடக்கமாய் அமைதியாய் கூறினார்
ஆட்சிக்கு வந்தால் சைவம் ஆகிடுவேன்..
அல்லக்கைகள் சத்தமாய் கதறின
இனி சைவம் சைவம் சைவம்..
ஆடுகளும் சைவமென கத்தின...
நரியார் ஆட்சிக்கு வந்தார் - இனி
நாம் சைவமே என்ற சூளுரைத்தார்
சைவம் சாப்பிடும் ஆடு மட்டுமே
சமைத்து வர ஆணையிட்டார்.....

No comments:
Post a Comment