Thursday, 15 December 2016
Saturday, 5 March 2016
Thursday, 3 March 2016
Thursday, 28 January 2016
தனி மரம்....
தலைநகரத்தின்
மையத்தில்
தலைமையக வளாகம்...
உடனிருந்த
நண்பர்களை இழந்த
தனி மரம்....
தலைமுறைகளை
தாண்டி
தனியாய் நிற்கிறது......
தர்பார் பல கண்டும்
தளராமல்
நிற்கிறது....
ஆயிரமாயிரம்
மக்களை
அன்றாடம் காண்கிறது....
ஆனந்தம்..
ஆரவாரம்...
அழுகை....
கோரிக்கை..
போராட்டம்...
பாராட்டு.....
அத்தனையும்
கண்டும் அலட்டாமல்
நிற்கிறது......
ஒற்றைக்காலில்
தவமிருக்கும்
முனிவர் போல......
Friday, 8 January 2016
Friday, 1 January 2016
வருக வருக புத்தாண்டே
வருக வருக
புத்தாண்டே
வருகின்ற
2016 ஆம் ஆண்டு
வண்ண மயமாய்
மலர்ந்திடவும் ………
எண்ணுகிற எண்ணங்கள்
ஏற்றமயமாய்
இருந்திடவும் ……….
கைக்கொள்ளும்
காரியங்கள்
கைகூடிடவும் ………
உலக மாந்தர்
உயர்வு பெற்றிடவும்
வாழ்க வளமுடன்
என
மனமார வாழ்த்திடும்
நெஞ்சம்
விடை பெறுக 2015.........
விடை பெறுக
2015.........
பட்டதும்
பெற்றதும்
கற்றதும் ……….
அடைந்ததும்
இழந்ததும்
மகிழ்ந்ததும்………
வீழ்ந்ததும்
மீண்டு
எழுந்ததும் …………
அத்தனையும்
நன்மைக்கே.....
வருகின்ற
காலம்
நமக்கானதாய்
நம்முடையதாய்
அமைந்திட
வாழ்த்தும்
அன்பு நெஞ்சம்.
Subscribe to:
Posts (Atom)
எச்சரிக்கை
தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...
-
பணி ஓய்வு பெறும் போது ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்றவர். பொதுவாகவே பணி ஓய்வு பெற்றபின் வேலை பார்த்த அலுவலகங்களு...
-
நான் முதன் முதலாக பணிக்கு சேர்ந்த இடம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்...
-
40 ஆண்டுகளுக்கு முன் தைத்திங்களில், இதே நாளில், (10.02.1986)இனிய மாலைப் பொழுதினிலே, ஒரு கல்விச்சாலை தன்னிலே, ஒரு எளிய, சுயமரியாதை, சாதி மறுப...



