சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 28 January 2016

தனி மரம்....


 தலைநகரத்தின்
மையத்தில்
தலைமையக வளாகம்...
உடனிருந்த
நண்பர்களை இழந்த
தனி மரம்....
தலைமுறைகளை
தாண்டி
தனியாய் நிற்கிறது......
தர்பார் பல கண்டும்
தளராமல்
நிற்கிறது....
ஆயிரமாயிரம்
மக்களை
அன்றாடம் காண்கிறது....
ஆனந்தம்..
ஆரவாரம்...
 அழுகை....
கோரிக்கை..
போராட்டம்...
பாராட்டு.....
அத்தனையும்
கண்டும் அலட்டாமல்
 நிற்கிறது......
ஒற்றைக்காலில்
தவமிருக்கும்
முனிவர் போல......

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...