ஆத்தோரம் போற புள்ள
ஆயுசுக்கும் கூட வரவா....
வேலையில்லா வெட்டி பசங்க
வெரட்டி வருவாங்க..
குடிக்க காசுக்காக
கொலைகூடசெய்வாங்க...
குரங்கு புத்திகாரங்க
குலைத்திட திரிவாங்க..
சாதி வெறி கொண்டு
சழக்கர்கள் திரிவாங்க...
அழகான பொண்ண பாத்தா
அனுபவிக்க துணிவாங்க...
அழகான துணையாக
ஆயுசுக்கும் கூட வரவா....
No comments:
Post a Comment