சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 21 August 2025

பார்த்தாலே புரியுமே...

பாசமோ, நேசமோ, 
காதலோ, எல்லாமே 
காசுக்கு பின்னாலே... 


கலையும், திறமையும், கவர்ச்சியின் முன்னே கவிழ்ந்திடும் தன்னாலே.... 
கண்ணுக் கழகாய்
கனவன் வேண்டுமென்று காத்திருந்த கன்னி
கடைசியில் போனாளே.. 

ஆயிரம் திறமைகள் அவளுக்கு இருந்தாலும் ஆடவரோடு போட்டியென்றால்


ஆயிரம் திறமைகள் அவளுக்கு இருந்தாலும் ஆடவரோடு போட்டியெனில்
அனுமதித்திடவாரோ எளிதில் 


அனைவரும் ஒன்றாய் அன்போடு அளவளாவி அமர்ந்திருந்த காலம் 
அன்று.... 

ஆளுக்கொரு திசையாய் அவரவர் கையில் அலைபேசியோடு அமர்ந்திருப்பது இப்போது.... 
என்னவென்று தெரியாமல் எட்டியிருந்து பார்க்கையில் ஆமாம் என்ற கருத்து 
அருகாமையில் சென்றால் அதுவே இல்லை என்றானது.... 

ஊரில் உள்ளவர் உரைப்பதை கேட்டால் 
ஊர் போய் சேர 
ஒரு நாளும் முடியாது

அவரவர்க்கு ஆயிரம் 
எண்ணம் 
அவரவர் தேவைப்படி
எட்டியிருந்து பார்ப்பவர் 
எண்ணப்படி மட்டுமே 
 எல்லாம் தெரியும்.. 
உள்ளது உள்ளபடி
உண்மையில் நடப்பது
அவரவர்க்கே தெரியும்... 
இதில் சொல்வதற்கு 
என்ன இருக்கிறது... 
அங்கம் குறைந்தாலும் 
சாதிக்க நினைப்பவருக்கு 
அது ஒன்றும் தடையில்லை. உள்ள உறுதியும் ஊக்கமும் திறமுமிருந்தால் சாதிக்க 
தடையேதும் இல்லை
ஒரே காட்சி 
சிந்தனையும் வழிகாட்டலும் அவரவர் எண்ணப்படி... 

அறிவியல் புதுமைகள் இல்லாத காலத்தில் கூட ஆனந்தமாய் இருந்தோம் அன்று.. 
அனைத்தும் கிடைத்தும் பதுமைகளானோம் இன்று...
அன்னையின் அருமை அறிந்த அளவு அப்பனின் அருமை புரிவதில்லை பலருக்கு
சொந்த நாவிருந்து இரவல் நாவினால் இன்னல் தானே வரும்... 
அவசியமான காலத்தில் கூட அமைதியாக இருப்பது சில நேரம்... 
திட்டமிடுகையில் எளிமையானதாம் வாழ்க்கை. 
செயலிலே காணுவாய்
 பெரும் சோதனையாய்.. 
இளமை இருக்கையில் பணம் நீ துரத்தி, 
பணம் சேரும்கால்
முதுமை உனைத்துரத்தும்
பெரு மழையோ புயலோ வெள்ளமோ இடையூறு ஆயிரம் தடைகள் தாண்டி வரும் உணவை நீ தள்ளாதே....
கால வெள்ளத்தில் 
காணாமல் போகும் இளமையும் செல்வமும்
இருக்கிற வரையிலே நேர்மையாய் அனுபவி... 

 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...