அந்நியர்களுக்காகக் கல்லறைகளைத் தோண்டிய சைலஸ் பிரவுன் என்ற மனிதனின் கதை சிலருக்கே தெரியும்.
அலபாமா, 1932. பெரும் பொருளாதார மந்தநிலை. வெள்ளையர் கல்லறைத் தோட்டம் வெள்ளையர்களையே புதைத்தது. கறுப்பினத்தவர் கல்லறைத் தோட்டம் நிரம்பி வழிந்தது.
எனவே, செல்வி லாட்டி இறந்தபோது, அவர் குடும்பத்தினருக்கு அவரை அடக்கம் செய்ய இடமில்லாமல் போனது.
சைலஸ் பிரவுன் ஒரு விவசாயி. அவருக்குப் பின்புறம் ஒரு வயல் இருந்தது. அவர் சொன்னார்: "அவளை இங்கே கொண்டு வாருங்கள்."
அவரே கல்லறையைத் தோண்டினார். கைகளால் மட்டுமே. இயந்திரம் இல்லை. 6 அடி ஆழம்.
ஓக் மரத்தில் ஒரு சிலுவையைச் செதுக்கினார். ஒரு கரித்துண்டால் அவள் பெயரை எழுதினார்.
இதை அவர் 22 ஆண்டுகள் இடைவிடாது செய்தார்.
253 கல்லறைகள் உருவாக்கினார்.
ஆண்கள்பெண்கள், குழந்தைகள், பிறக்கும்போதே இறந்த இரட்டைக் குழந்தைகள், பனியில் உறைந்து இறந்த ஒரு முதியவர்,40 மைல் தொலைவில் கும்பல் வன்முறைக்கு உள்ளான ஒரு பதின்பருவத்தினர் என சைலஸ் அவர்கள் அனைவரையும் புதைத்தார். ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்கவில்லை.
"ஏன்?" என்று 1952-ல் ஒரு நிருபர் அவரிடம் கேட்டார்.
சைலஸ் கூறினார்: "ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் ஓய்வெடுக்க ஓர் இடம் உண்டு என்று என் அம்மா எப்போதும் சொல்வார்." அவர்கள் வாழ்ந்த போது இந்த உலகம் அவர்களுக்கு ஓர் இடத்தைக் கொடுத்தாலும் கூட."
சைலஸ் 1954-ல் இறந்தார். அதே வயலில் அடக்கம் செய்யப்பட்டார்.
அவரது சிலுவையில் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது: "சைலஸ் பிரவுன். மற்றவர்கள் இளைப்பாறுவதற்காக அவர் இங்கு மண்ணை தோண்டினார்."
அந்த வயல் இப்போது ஒரு பாதுகாக்கப்பட்ட கல்லறையாக உள்ளது. அதற்கு "சைலஸின் அமைதி" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இலவசமாகக் கல்லறைகளைத் தோண்டிய மனிதர்.
சில ஓய்வுகள் அந்நியர்களின் கரங்களால் சம்பாதிக்கப்படுகின்றன************
இவ்வளவு ஏன், மிக நவீன காலத்தில், எல்லோரும் சமமாக மதிக்கப்படுவதாக சொல்லப்படக்கூடிய இந்நாளில் கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி இடம், புதைப்பதற்கு இடமில்லை, கொண்டு செல்ல பாதை இல்லை, மீறிக்கொண்டு சென்றால் அடி, உதை, வெட்டு, குத்து, படுகொலைகள் என சமூக அவலங்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை தலைகுனிவோடு தான் ஒப்புக்கொள்ள வேண்டும்.

No comments:
Post a Comment