முதுமையால்
இறந்தார்கள்
அநேகர் அன்று..
இளமையிலேயே
இறக்க நேரிடுபவர்
பலர் இன்று...
விதியாலன்று
காலநிலை
மாற்றத்தாலே..
நாடகமல்ல இது..
மிகைப்படுத்தலுமல்ல இது.
நடந்து வருவதுதானே இது...
வெள்ளங்கள்,
வெப்ப அலைகள்,
காட்டுத்தீ,
மாசடைந்த காற்று,
அழியும் காடுகள்,
உயரும் கடல் மட்டம்
மாறுதல் மானிடரின்
கேடென உணர்வீர்.....
வளர்ச்சி என்றார் முன்னோர்..
முன்னேற்றம் என்றார் ஆள்வோர்..
கார்பரேட்கள் லாபமென்றுரைத்தார்..
பலியாகப் போவதோ இளைஞர்...
பருவநிலை மாற்றம்
வெறும் வெப்பநிலையல்லவே
அது
உயிர்வாழ்வைப் பற்றியது.
நீதியைப் பற்றியது.
நாம் குழந்தைகளிடமிருந்து
திருடும் எதிர்காலத்தைப் பற்றியது.
தேவையில்லை வாக்குறுதிகள்..
தேவைகளிங்கு செயல்களே..
மாற்றுக்கோள் இல்லை.
ஓடி ஒளிந்திடத்தானே...

விழித்துக் கொள் மனிதா.
ReplyDelete