அவர்கள்
காடுகளை அழித்தனர்.
சாலைகளை அமைத்தனர்..
காணிகளை திருத்தினர்..
வளர்ச்சி என கொண்டாடினர்.
வனங்கள் தேடி
விலங்குகள் வந்ததும்
வனவிலங்கு மோதலென்றனர்..
வனவிலங்கு பிரச்சனையில்லை-அவர்
வாழ்விடம் தொலைந்ததேயாம்.
வனங்கள் காத்திடுவோம்-பிறர்
வாழ்வுரிமை மதித்திடுவோம்..

No comments:
Post a Comment