நகரம் கட்டியதோ
உலோக கூரை..
குளிர்விக்கவோ
செயற்கை விசிறி..
அள்ளிக்கொட்டுவதோ
அனல்காற்று தனை..
இதனைத்தானே
வளர்ச்சி என்போம்...
இயற்கை தந்ததோ
எழிலோடு கூடாரம்..
அள்ளி தந்ததோ
சுகந்த காற்றினை..
மனதுக்குள் தோன்றும்
மகிழ்ச்சியும் சாந்தியும்..
இதனையே தடையென கூறி
காடுதனைஅழித்திடுவோம்...

No comments:
Post a Comment