மிகப்பெரிய படை இருந்தும், பலமான கோட்டை கொத்தளமிருந்தும், ஒரு குண்டு கூட வீசப்படாமல், ஒரு சிறு அசைவோ, எதிர்ப்பு இல்லாமல் ஒர்அரசு வீழ்வதும், ஒரு ஆட்சி சப்தமின்றி மாறுவதும் சாத்தியமா என்ன?! நவாப் சிராஜ் உத்-தௌலாவுக்கு அவரது தளபதி மிர் ஜாஃபர் செய்த துரோகமும், செல்வாக்கு மிக்க வங்கியாளரான ஜகத் சேத் ஆங்கிலேயர்களுக்கு அளித்த ஆதரவும், பிளாசி போரில் (1757) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கு கணிசமாகப் பங்களித்தன.
தோல்விக்குப் பிறகு, சிராஜ் உத்-தௌலாவும் அவரது மனைவி லுத்ஃப்-உன்-நிசாவும் போர்க்களத்திலிருந்து தப்பிச் சென்றனர், ஆனால் பின்னர் மிர் ஜாஃபரின் படைகளால் பிடிக்கப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டனர். போரைத் தொடர்ந்து, கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவுடன் மிர் ஜாஃபர் வங்காளத்தின் நவாபாகப் பதவியேற்றார்.
பிளாசிப் போர், கம்பெனியின் அரசியல் செல்வாக்கிற்கும், வங்காளத்தின் மீதான அதன் இறுதிக் கட்டுப்பாட்டிற்கும் தொடக்கமாக அமைந்தது.
பிளாசியைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் இறுதியில் பக்ஸார் போரில் (1764) உச்சக்கட்டத்தை அடைந்தன. அப்போரில், கிழக்கிந்திய கம்பெனி, முகலாயப் பேரரசர், அவத் நவாப் மற்றும் வங்காள நவாப் ஆகியோரின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தது.
இந்த வெற்றியானது அலகாபாத் உடன்படிக்கைக்கு (1765) வழிவகுத்தது. அதன்படி, முகலாயப் பேரரசர், வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளில் திவானி, அதாவது வருவாய் வசூலிக்கும் உரிமையை, கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கினார். பிளாசிப் போருக்குப் பிறகு, வங்காளத்தில் பிரிட்டிஷ் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் ராபர்ட் கிளைவ் ஒரு முக்கியப் பங்காற்றினார். பின்னர் அவர் வங்காள மாகாணத்தின் முதல் ஆளுநரானார்.
ஒரு நாட்டின் வீர வரலாற்றை தெரிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானது, துரோகத்தின் வரலாறையும் தெரிந்து கொள்வது தான்..
துரோகிகளின் துரோக சரித்திரத்தை அறிய செய்தமைக்கு நன்றி. இது போன்று இந்தியாவில் துரோகத்தால் வீழ்ச்சி அடைந்த அரசர்களின் சரித்திரத்தை அவசியம் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தொடருங்கள்.கோவை செல்வராஜ்
ReplyDelete