சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 30 January 2026

தியாகிகள் தினம்...

அந்நியர்களிடமிருந்து

விடுதலை 

வேண்டியி.. 

கத்தியின்றி, 

ரத்தமின்றி, 

யுத்தம் துவங்கியவர்... 


மண்ணின்   மைந்தரின் 

மதவெறிக்கு., 

துப்பாக்கிக்கு, 

பலியான்

துயரநாள்... 


"மனிதனை நேசிப்பவனை நேசிக்கிறேன்" என்று ஒரு அற்புதமான மணிமொழி உள்ளது. 

சக மனிதனையும் பிற மதங்களையும் மதிப்பது என்பது ஒரு மிகச் சிறந்த பண்பு. குறிப்பாக தலைவர்களுக்கு இருக்க வேண்டிய ஆகச்சிறந்த பண்பு. அந்த பண்பு இருந்ததால்தான் காந்தி மகாத்மா காந்தி என்று போற்றப்பட்டார். 

அவர் முரண்பாடே இல்லாத மனிதனா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஏராளமான முரண்பட்ட கருத்துக்களை உடையவர் தான் என்றாலும் மாற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டவர்.  

“உண்மையைத் தேடுகிற என்னுடைய முயற்சியில் நான் பல கருத்துக்களைக் கைவிட்டிருக்கிறேன்.. பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்..”

"காந்தி அகிம்சை விஷயத்தில் மிகவும் வன்முறையாக இருக்கிறார்" காந்தி அகிம்சையில் மிகவும் வன்முறையாளர் என்று அந்த காலத்தில் சொல்லும் படியாக அகிம்சா போராட்டத்தில் விடாப்பிடியாக இருந்தார். அவர் ஒரு மிகப்பெரிய சுதந்திர போராட்ட வீரராக இருந்தால் போதும், போராட்ட வடிவங்கள் எங்காவது அஹிம்சை விதிகளை மீறினால் அவர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார் கொண்டார் . . உதாரணமாக சவுரி சௌரா சம்பவத்தையே கூறலாம். 

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட போது கூட அவர்களுக்கு ஆதரவாக ஆங்கில அரசிடம் கோரிக்கை வைக்க கூட அவர் தயாராக இல்லை. அதே போல 1945 கப்பற்படை எழுச்சியின் போது அந்தப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்துவிட்டார். 

ஆனாலும் இந்திய மக்களை ஆங்கில அரசுக்கு எதிராக திரட்டுவதில் அவரது பங்கு மகத்தானதாக இருந்தது...

 அவர் முழுமையான சனாதன வாதியாக இருந்தபோது கூட ஏன் இந்து தீவிரவாதிகள் அவரை வெறுத்து கொலை செய்யும் அளவிற்கு சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது ஆய்வுக்குரிய விஷயம்.... 

காந்தி இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர் என்பதை விட முழுமையான சனாதான வாதி என்ற வகையில் வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக்கொண்டவர். இந்து மதக்கோட்பாடுகளை தன் நடைமுறைவாழ்வில் கடைப்பிடிப்பவர். இந்தியாவில் ராமராஜ்யம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படியிருந்தும் கோட்சே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும்... 

அவர் வர்ணாசிரமதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றாலும் தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அவர் தலித்துகளை ஹரியின் மைந்தர்கள் என்று அதாவது ஹரிஜன் என்றே அழைத்தார். 

அவர் இந்து மதப்பற்றாளராக இருந்த போதிலும், மதச்சார்பின்மை தான் இந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்திய தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியது என்பதில் உறுதியாக இருந்ததால் தான் கொல்லப்படுவதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்னால் “ பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது, சிறுபான்மையினர் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை..” முழங்கினார்.மதவெறி தாண்டவமாடிய பகுதிகளுக்கு பாதயாத்திரையாக சென்று அமைதியை நிலைநாட்ட போராடினார்... 

மதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறி வன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், “ உலகின் இரக்கமற்ற அந்த இரவில் ஆயுதமற்ற அந்த ஒற்றை மனிதர் பெற்ற வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 5500 ராணுவ வீரர்கள் பெற இயலவில்லை. மதவெறிக்கு எதிரான போரில் அவர் ஒற்றை மனிதப்படை ( one man army ) “ என்று சொன்னார்.

காந்தி சநாதனவாதி. ஆனால் அவர் தன்னுடைய குருவாகப் போற்றிய கோபாலகிருஷ்ண கோகலேயும், தன்னுடைய வாரிசாக அறிவித்த ஜவகர்லால் நேரும் நாத்திகர்கள்.அது மட்டுமல்ல, அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை அளித்தார். இதில் நாத்திகமும் அடக்கம். நாத்திகவாதியான பேராசியர் கோராவுக்கு நேர்காணல் அளித்த காந்தி அதுவரை ' கடவுள் தான் உண்மை ' என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த நேர்காணலுக்குப் பின் ' உண்மையே கடவுள் ' என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டவர்.

இந்த மாற்றம் அனைத்து மதப்பேரவையில் நாத்திகத்துக்கும் சமமான இடம் வழங்கப்பட்டுள்ளது.

காந்தி தனது லட்சியமாக அறிவித்த ராமராஜ்யம் பற்றி விளக்கினார் "ராமராஜ்யம் என்று சொல்லும்போது நான் இந்து ஆட்சி என்ற பொருளில் கூறவில்லை. பொருளிலேயே ராமனும் கூறுகிறேன் ரஹீமும் ஒன்று தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை." 

ராமராஜ்யம் என்பது பொருளுடைமை, இல்லாமை, நிறம் இனம் குலம், பாலினம், ஆகிய ஏற்றத்தாழ்வுகள் நீங்கிய. நிறைவான ஜனநாயகம் என்று பொருள்படும்.  நிலமும், அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும். நீதி என்பது காலந்தவறாததாக, முறையானதாக, செலவு குறைவானதாக, இருக்கும்.

 வழிபாட்டுச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஆகியவை இருக்கும்.

ஒரு அரசு வாய்மை மற்றும் அகிம்சையைப் பற்றி இருக்க வேண்டும். வளமான, மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும், கிராமப்புறங்களையும் கொண்டிருக்க வேண்டும்..” என்று விளக்கமளித்தார்.

சுருக்கமாக சொல்வதானால் அவர் சொல்லக்கூடிய ராமராஜ்யத்தில் ஒரே படித்துறையில் புலியும் ஆடும் ஒன்றாக நீர் அருந்தி, ஒருத்தர் வாழ்வில் ஒருத்தர் குறுக்கிடா வண்ணம் சமாதான சகவாழ்வு வாழ்வது என்பது தான். 

இந்து மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும் காந்தி பகுத்தறிவும், அறவுணர்வும் தான் மதக்கோட்பாடுகளில் மேலோங்கியிருக்க வேண்டும். விரும்பினார்.

பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அறவுணர்வில்லாத எல்லா மதக்கோட்பாடுகளையும் பகவத்கீதையாக இருந்தாலும் திருக்குர்ஆனாக இருந்தாலும் சரி நிராகரிப்பதாகக் கூறினார். அதே போல எல்லாமதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

 “என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களும் ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள் தான், அல்லது ஒரே மரத்தின் கம்பீரமான கிளைகள் தான்..” என்று சொன்னார்.

தன் வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகமாக சிந்தனையும் வாழ்வும் ஒன்றாகவே இருந்ததால் தானே மகாத்மாவை இந்து மதவெறியர்கள் வெறுத்தனர்.

பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் பல ஆண்டுகளாக பத்திரமாக இருந்து போராடிய மகாத்மா சுதந்திரம் இந்தியாவில் மண்ணின் மைந்தர்களால் அதிலும் அவர் நேசிக்கிற இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என அறிவித்துக் கொண்டவரின் வெறியாட்டங்களால் ஐந்து மாதங்கள் கொலையுண்டார் என்பது மிகவும் துயரமானது.. 

ஒருவேளை மகாத்மா மதவெறியர்களால் கொல்லப்படாமல் இருந்திருந்தால், என்றோ காங்கிரஸ் கட்சி சனாதனவாதிகளின் கைப்பிடிகளுக்குள் சென்றிருக்கும். நேரு என்ற மதசார்பற்ற மனிதர்களை ஒதுக்கி வைத்தார்.. காந்தியின் படுகொலை சனாதன வாதிகளை மக்களிடமிருந்து தள்ளி வைத்தது. எனினும் சனாதன சக்திகள் மீண்டும் மேலோங்கிவிட்டது. அதன் விளைவு,  காந்தி படுகொலை செய்யப்பட்ட 70 ஆண்டுகளாக அவரைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைக்க முயற்சிகள் நடந்தன வருகின்றன. 

"ரகுபதி ராகவ ராஜாராம்

பதீத பாவன சீதாராம்

ஈசுவர அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்." 

ஈஸ்வரனும் அல்லாவும் அவன் ஒருவனின் பெயரே என்று  இந்தப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. .



No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...