ரசனை
காப்பியத்தில் தொடங்கி
பத்து பக்க கவிதையாகி
பத்து பத்தியில் சுருங்கி
ஹைக்கூவாகி
ஒற்றை வார்த்தையில்
முடிந்தது தமிழனின் ரசனை
" சீ"
குப்பை
ஊருக்கு அது குப்பை
அதில் வரும் காசு தானே
நிரப்பிடும் அவன் வயிற்றை...
அப்பனுக்கு கந்தலாடை,
அவன்பிள்ளைக்கோ அதுவுமில்லை...
ஆனாலும்
அவன்
இந்நாட்டு மன்னர்!..


No comments:
Post a Comment