சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 30 January 2026

இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

 நாடு என்பதற்கு தமிழ் கூறும் நல் உலக இயற்கை வளம் புவியியல் அமைப்பு வாழ்நிலை கொண்டு குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக பிரித்து இருக்கிறது இவை முறையே மலை, காடு, வயல், கடல், வறண்ட நிலங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வம், மக்கள், தொழில், உணவு, பறவை, விலங்கு, பூ, இசைக்கருவி எனத் தனித்துவமான கூறுகள் உள்ளன. 

எனவே நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக பள்ளமாக இருந்தாலும், மேடான நிலமாக இருந்தாலும், என புவியமைப்பாக எவ்விடமாயினும் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே என்கிறார் ஔவையார். ஆடவர் என்பவர் ஆள்பவர்களைக் குறிக்கிறது. 

அதாவது ஒரு நல்ல நாடு என அழைக்கப்படுமாயின், அது நல்லவர்களால் ஆட்சி செய்யப்பட்டால் மட்டுமே அவ்வாறு சொல்ல முடியும். 

மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி புரிந்தால் நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருப்பர்.அதனால் களவு, கொலை, கொள்ளை  போன்ற எந்தவிதமான தீய செயல்களும் நடைபெற வாய்ப்பு  ருக்காது. மன்னன் நம்மை

பாதுகாத்துக் கொள்வான் என்ற

நம்பிக்கையில்தான் மக்கள் எந்தவித

அச்சமுமின்றி தூங்க முடிகிறது.

மாறாக மன்னன் கொடுங்கோலாக...

அளவுக்கு அதிகமாக வரி வசூலிப்பவனாக...

ஆடம்பர பிரியனாக ...இருந்தால்

நாட்டில் நல்லாட்சி நடைபெறாது.

நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது.

நாட்டில் எப்போது என்ன நிகழுமோ என்ற ஒரு அச்ச உணர்வோடே வாழவேண்டி இருக்கும்.வறுமை குடிகொண்டு விடும்.

அதனால் களவு, வழிப்பறி, கொலை,

கொள்ளை மிகுந்து விடும்.


***************

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே"

--------புறநானூறு 187.

பாடற் குறிப்பு :

பாடியவர் : ஒளவையார்.

இக்குறிப்பை  படித்துவிட்டு யாராவது எந்த தேசத்திலாவது ஆளுகின்ற ஆட்சியாளர் ஆடம்பரப்ரியாராக, கூத்து கட்டுபவராக, புளுகுணி மூட்டையாக, அளவு மீறி வரி வசூல் செய்து மக்களை நாசம் செய்பவராக, அரசாங்க சொத்தை தனது குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்களுக்கு வாரி இறைப்பவராக இருந்தால் மக்களுடைய துன்பங்களை புரிந்து கொள்ளாதவராக, பொல்லாதவராக இருந்தால் அது உங்களுடைய சிந்தனைக்கு விட்டு விடுகிறோம். இப்பாடலை யாரையும் குறிப்பிட்டு ஔவையார் பாடவில்லை என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...