ஆயுதம் தரித்திருந்தார்கள்..
பற்களாய்
கொம்புகளாய்...
நகங்களாய்
தங்களைக் காக்க
வேட்டையாட
இயற்கை தந்ததாய்...
மனிதர்களும் ஆயுதம் தரித்திருந்தார்கள்.
வாட்கள்
குண்டுகள்
ராக்கெடகளென
பிற உயிர்களை கொல்ல
கொள்ளை கொள்ள
தாங்கள் படைத்ததாய்..
விலங்குகள் ஒருபோதும்
மண்ணை ஆக்கிரமிக்க
உலகை ஆக்கிரமிக்க
பிறரை அடிமைகொள்ள
ஆயுதம் தரித்ததில்லை
மனிதர்களைப் போல...
விலங்குகள்
ஒருபோதும்
காடுகளை அழித்ததில்லை
சுற்றுச்சூழலை கெடுக்கவில்லை
போர் புரிந்து பூமியை
அழித்திடவில்லை
மனிதர்களைப் போல...

Very correct
ReplyDelete