சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 12 June 2026

பூவுலகு காப்போம்


 மனிதனின் கூன் முதுகு நிமிரு முன்னும், 

காடு திருத்தி கழனியாக்கிடு முன்னும், 

மண்ணை கிளறி விதையிடும் முன்னும், 

நடவு நட்டு களை பறிக்கும் முன்னும்

காடுகளும் மரம் செடிகொடிகள் இருக்கத்தான் செய்தது. 

காய்கனியாய் கிழங்குகளாய் கொடுக்கத்தானே செய்தது. 

இவனே படைத்த மாதிரி எவருக்கும் இல்லை என்கிறானே?!!! 



1 comment:

  1. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனிலிருந்து பிரிந்து விழுந்த துண்டு .....பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ..காற்றிலும் மலையிலும் உருகி ..
    உருண்டையாகி ....பூமி ஆகி அதுவே ஒற்றைச் செல் அமீபா ஆகி அதிலிருந்து........ அதில் இருந்துபாக்டீரியாக்கள் தோன்றி முதல் உயிரினமாய் அமீபா ,.,.வந்து பரிணாமத்தி வளர்ச்சியே குரங்காகி குரங்கின் முது பருவத்திலே மனிதனாகி ....இன்று இவன் பேசுகிறான் அனைத்துக்கும் அத்துபடி நான் தான் என்று ..இயற்கை சிரிக்கிறது..

    ReplyDelete

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...