சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 13 June 2026

. மறைக்கப்பட்ட வரலாறு

 "கொலை , ஒரு சிலரைக் கொன்றால் அது குற்றவாளி. ஆனால், ஆயிரக்கணக்கானோரைக் கொன்றால் அதுவே ஒரு நாட்டின் போர் வீரனாகவோ அல்லது ஹீரோவாகவோ மாற்றப்படுகிறது." (One murder makes a villain, millions a hero.)என்றொரு வசனம் சார்லி சாப்ளின் அவர்கள் நடித்த மான்ஸியர் வெர்டக்ஸ் என்ற படத்தில் வரும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட வசனம் அது. 

உலக வரலாற்றில் பல்வேறு போர்கள் கொடூரமான ஆட்சியாளர்களால் பல லட்சக்கணக்கான பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சில கொடுங்கோளர்கள் எதிரி நாட்டு மக்களை அல்லது தங்களுக்கு பிடிக்காத இனத்தை இனப்படுகொலையாக செய்திருக்கிறார்கள். நம் எல்லோரிடமும் அதிகமாக பேசப்பட்டு ஆழமாக மனதில் பதிந்தது ஜெர்மனிய சர்வாதிகாரி நடத்திய கொடுமைகள். ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களையும் இதர ஐரோப்பிய ரஷ்ய மக்களையும் போர்களில் கொன்றது மாத்திரமல்லாது, வதை முகாம்களில் படுகொலை செய்தது வரலாற்று ஆவணங்களாக உள்ளன. இதற்காக சர்வதேச நீதிமன்றம் நியூரம்பர்க் என்ற நகரில் விசாரணை நடத்தி, அவற்றை ஆவணப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்தார்கள். 

அதுபோன்று கொடூரம் மீண்டும் இவ்வுலகில் நடைபெற்று விடக்கூடாது என்று பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலையையினை பல ஆட்சியாளர்கள் செய்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் மக்களின் வெளிச்சத்திற்கு வராமலோ, அல்லது ஆவணப்படுத்தப்படாமலோ, அல்லது அதிகமாக பேசப்படாமலோ போய்விட்டது. 

உலகின் மிகப்பெரிய நாகரிகமான ஆட்சியாளர்களாக, மனித உரிமைகளை பேணி காப்பதாக பீற்றிக் கொண்டிருக்கக் கூடிய பிரிட்டன் பிரான்ஸ் பெல்ஜியம் போன்ற பல்வேறு நாடுகள் உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் காலணி ஆதிக்க ஆட்சி நடத்திய போது லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து இருக்கிறார்கள். வதை முகாம்கள் கொடூர சித்திரவதை முகாகள் மூலமாக தண்டித்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்று ஆவணங்கள் நிறைய உள்ளன. உதாரணத்திற்கு பெல்ஜியம் மன்னர் இரண்டாம் லியோபோல்ட் காங்கோ சுதந்திர அரசை தனது தனிப்பட்ட காலனியாக மாற்றிய லியோபோல்ட், ரப்பர் சேகரிக்கும் கட்டாய உழைப்பை அமல்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாக ரப்பர் சேகரிப்பவர்களின் கைகள் மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டன. பட்டினி மற்றும் நோய்களுடன் சேர்ந்து 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மடிந்தனர்.


இது ஒரு புறம் இருக்க பிரிட்டிஷ்காரர்கள் பிரெஞ்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்கள் இன்னும் சில ஐரோப்பியர் ஆட்சியாளர்கள் ஹிட்லரை ஒரு அரக்கன் என்று அழைத்தார்கள். ஆனால் மத்தியதரைக் கடலின் மறுபுறத்தில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

ஹோலோகாஸ்ட் ஆவணப்படுத்தப்பட்டு, கண்டிக்கப்பட்டு, இறுதியில் நியூரம்பெர்க்கில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் ஆப்பிரிக்கா முழுவதும் தங்களின் சொந்த வெகுஜன தடுப்புக்காவல், கட்டாய உழைப்பு மற்றும் இன அழிப்பு முறைகளை — பட்டப்பகலில், முழுமையான அரசாங்க அங்கீகாரத்துடன் — செயல்படுத்திக் கொண்டிருந்தன.

உலகம் ஒருபோதும் மறக்கக்கூடாது என்று ஒப்புக்கொண்ட முகாம்களின் அனைத்து கட்டமைப்பு ஒற்றுமைகளையும் கொண்ட முகாம்களில், பிரான்ஸ் மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமான அல்ஜீரியர்களைத் தடுத்து வைத்து கொன்றது. மௌ மௌ எழுச்சியின் போது கென்யாவில் பிரிட்டிஷார் அதையே செய்தனர். காங்கோவில் டச்சுக்காரர்கள். அங்கோலா மற்றும் மொசாம்பிக் முழுவதும் போர்த்துகீசியர்கள்.

வித்தியாசம் குற்றத்தில் இல்லை. வித்தியாசம் பாதிக்கப்பட்டவரில் இருந்தது. ஹிட்லரால் பாதிக்கப்பட்ட யூதர்கள், ஐரோப்பியர்களைப் பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அளவிற்கு கருப்பின மக்களாகிய ஆப்பிரிக்கர்கள் ஆசியர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை பற்றி மூச்சு விடுவதில்லை

உலகம் அருங்காட்சியகங்களைக் கட்டியது, சர்வதேச சட்டங்களை இயற்றியது, மற்றும் "மீண்டும் ஒருபோதும் இல்லை" என்பதை ஒரு நாகரிக உடன்படிக்கையாக ஆக்கியது — ஆனால் ஐரோப்பியர்களுக்கு நடந்த அட்டூழியங்களுக்கு மட்டுமே. ஆப்பிரிக்கர்களுக்கு நடந்த அட்டூழியங்கள், குறிப்பிடப்பட்டால் கூட, அடிக்குறிப்புகளாகவே ஆகிவிட்டன.

 அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட துயரம் தற்செயலானது அல்ல. அது ஒரு கட்டமைப்பு.

தீமைக்கான அளவுகோல் உலகளாவியது என்றால், அது ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது?

உலக மக்களுக்குக் கற்பிக்கப்படாத மேலும் பல ஆப்பிரிக்க மற்றும் உலகளாவிய கதைகளுக்கு @african.echo-வைப் பின்தொடரவும்.

**மேற்கோள்கள்:**

- சட்டன், ஐ. (1984). *ஆப்பிரிக்காவில் காலனித்துவ வதை முகாம்கள்.* ஆப்பிரிக்க வரலாற்று இதழ்.

- ஃபனான், எஃப். *பூமியின் அவலநிலைகள்* (1961). குரோவ் பிரஸ்.

3 comments:

  1. சரிதான் இது வரை தெரிந்து கொள்ளாத செய்தி.முடிந்தால் கொஞ்சம் விரிவாக பதிவிடவும் பணி தொடர வாழ்த்துகள் நன்றிகள்

    ReplyDelete
  2. இறுதியில் ஈழத் தமிழர் படுகொலை லட்சக்கணக்கில். நமக்கு அருகாமையில் நடத்தப்பட்டது. நடத்தியவர்கள் அந்நாட்டுக்கு அண்மையில் இருந்து சென்றவர்கள் என வரலாறு. மனிதன் தான் மனிதனுக்கு எதிரி. மற்றவை எல்லாம் மிகவும் அரிது.நாகரீகம் வளர்கிறதா? அல்லது வளர்கிறதா? அக்காலத்திலும் இனப்படுகொலை. இக்காலத்திலும படுகொலை.. மனிதன் மாறிவிட்டான். மதத்தில் ஏறி விட்டான். கோவை செல்வராஜ்

    ReplyDelete
    Replies
    1. உண்மை. நம் தமிழின மக்கள் இன அழிப்பினை சந்தித்தார்கள் என்பது வரலாற்று உண்மை. தனிப்பதிவாக விரிவாக எழுதிட்டு திட்டம்

      Delete

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...