பிள்ளை பிராயத்திலே
பெற்றோரும் உற்றாரும்
கொண்டாடி மகிழ்விக்கையிலே
புரியாத சந்தோஷம்...
இளம் வயதில்
இணையரோடு
கொண்டாடி மகிழ்கையில்
ஏராளமான சந்தோசம்....
. பிள்ளை குட்டிகளோடு
உற்றார் உறவினரோடு
கொண்டாடுகையிலே
உலகு வென்ற சந்தோஷம்....
சிறகு முளைத்து
பறவைகள் பறந்த பின்
வெற்றுக் கூடு தனில்
எஞ்சிய இணையரும்
மிஞ்சிய நண்பரும்
வாழ்த்துகையில்
நெஞ்சமெல்லாம் நெகழ்ச்சி...
No comments:
Post a Comment