ஆதவனை
ஜாதக கட்டத்திற்குள்
அடக்கி விட்டு
அளந்து விடுவது
ஆன்மீகம்...
ஆதவனின் சக்தியை
அகிலத்துக்கு
அறிவிப்பது
அறிவியல் ஞானம்..
கிராமத்து
உழைப்பெல்லாம்
காய்கனியாய்
உணவாய் உலகுக்கு..
நகரத்து
குப்பையெல்லாம்
உலகத்தை நாசமாக்க
கிராமத்துக்கு....
காட்டை அழித்திட்டு
ஊருக்கு உபதேசம்
மரம் நடுவீர்
மழை பெறுவீர்....



No comments:
Post a Comment