சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 26 May 2026

கோடைக்கால கொண்டாட்டம்.

பார் பற்றி எரிகிறது, 
பார்த்து கொண்டிருக்கிறோம் வேடிக்கை.. 

பச்சை மரம், செடிகளெல்லாம்
கருகி சருகுகளாகின்றன. 

பறவைகள், விலங்குகள் 
தண்ணீர் வேண்டி தவிக்கின்றன.. 

மனிதர்களோ கோடைக்கால
கொண்டாட்டத்திற்காய் திரிகிறார். 


 இது இனி வெறும் கோடைக்காலம் மட்டுமல்ல.

இது ஒரு எச்சரிக்கை.

ஒவ்வொரு ஆண்டும், வெப்பம் மேலும் தீவிரமடைகிறது.

சாலைகள் கருகுகின்றன. மரங்கள் காய்ந்து போகின்றன. பறவைகள் தண்ணீரைத் தேடுகின்றன. மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.

வெப்ப அலை என்பது வெறும் வெப்பநிலையைப் பற்றியது மட்டுமல்ல.

அது விவசாயிகள், தொழிலாளர்கள், குழந்தைகள், முதியவர்கள், விலங்குகள் மற்றும் நமது எதிர்காலத்தைப் பாதிக்கிறது.


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...