மரணம்
எல்லா வலிகளிலிருந்தும்
விடுதலை பெறும் வழி...
நாமாக தேடும் வழி அல்ல,
தானாக போகும் வழி...
வந்தது நிஜம் போலவே
போவதும் நிஜம்....
இருப்பது நிஜம் போலவே
இறப்பதும் நிஜம்...
இருந்தும் இல்லாது போகும்
நிழலான நிஜம்...
வாழ்கின்ற காலத்திலே
வாராதென்று ஏமாந்து,
வருகின்ற போது
பதறி அழ வைக்கும் நிஜம்..
போனவருக்கு துயரமில்லை
துக்கமும் கவலையுமில்லை
வாழ்பவரை கதற வைக்கும் நிஜம்.
காலத்தால் கதறியழுதவரும்
கண்ணீர் துடைத்து
கவலை மறந்து
சிரிக்க போகும் நிஜம்....
No comments:
Post a Comment