ஆலயத்திற்குள் வர
அனுமதி மறுக்கப்பட்டவனை
தக்க வைத்திட
சொல்லி வைப்போம்,
கோபுர தரிசனம்
கோடி புண்ணியமென....
வாசலில் தட்டேந்தி
வழியற்றவனின் யாசகம்..
உள்ளே ஆண்டவனிடம்
பக்தனின் யாசகம்...
இவர்களுக்கு நடுவில்
தட்டேந்தி யாசகம்....
பணம் படைத்தவனுக்கு
பக்கத்தில் தரிசனம்..
இல்லாவனுக்கு எட்டியே
இலவச தரிசனம்..
நாதியற்றவனுக்கோ
நடுவீதி உற்சவர் தரிசனம்...
வள்ளுவம் தந்ததோ
வையத்தார் வாழ்ந்திட
வழிகாட்டும்தத்துவம்...
சனாதனம் காட்டிடும்
சமுத்தை கூறு போடும்
சாக்கடை தத்துவம்...
No comments:
Post a Comment