40 ஆண்டுகளுக்கு முன் தைத்திங்களில், இதே நாளில், (10.02.1986)இனிய மாலைப் பொழுதினிலே, ஒரு கல்விச்சாலை தன்னிலே, ஒரு எளிய, சுயமரியாதை, சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. அடியேனுக்கும் என்னை நம்பி கரம் பிடித்த என் இணையருக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தோழர் கே. கங்காதரன் தலைமையில், இருதரப்பு பெற்றோர் மற்றும் குடும்பத்தாரும், இருதரப்பு உறவினர்களும், நண்பர்களும், தோழர்களும், அவர்தம் குடும்பத்தாரும் வாழ்ந்த எளியதோர் திருமணமாக நடைபெற்றது. சங்கத் தலைவர்கள் வாழ்த்துரை வழங்க, வந்திருந்தோர் ஆசிரியர்கள் அளித்திட, சிறப்பானதோர் திருமணம் நடைபெற்றது. மகிழ்வுறு மனமுமாய் எளிய விருந்துடனே நடைபெற்று 40 ஆண்டுகள் கழிந்து போயின. ஏராளமாய் ஏற்ற தாழ்வுகள் வந்தாலும், வாழ்விலே முன்னேற்றமாய், இரு மகன்களுடனும் அவர்தம் குடும்பத்தாருடன், 40 ஆண்டுகள் நிறைவு பெற்று 41 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்.
எங்கள் வாழ்வின் முன்னேற்றத்தில், இன்ப துன்பத்தில் பங்கேற்ற, உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி.


இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 🌺😁🌹💐🌷❤️🌸🙏
ReplyDeleteHappy wedding Anniversary. Stay blessed
ReplyDeleteValtha vayathillai valga valamudan nalamudan pallandu palakodi noorandu entrum Anbudan C.SureshKumar MSO Otty at Thiruvarur
ReplyDeleteHappy wedding anniversary 💕 💖
ReplyDeleteபுதுக்கோட்டை டி.இ.எல்.சி பள்ளியில் நடைபெற்ற மணலிழாவில் இணைந்த நீங்கள் 40 ஆண்டுகள் நிறைவு செய்த இந்த நாளில் மனமார வாழ்த்துகிறேன்.
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துகள் நண்பரே
ReplyDelete