சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 27 February 2026

தேசிய அறிவியல் தினம்


இப்பூவுலகில் வசிக்கக்கூடிய எல்லா ஜீவராசிகளிடமிருந்தும் மாறுபட்ட ஜீவனாக மனிதன் மட்டுமே இருக்கிறான் என்றால், அதற்கு ஒரே காரணம் அவன் சிந்திக்க தெரிந்தவன், செயலாக்க தெரிந்தவன், இயற்கையை தனக்கு சாதகமாக மாற்றக்கூடிய வல்லமை உடையவன் என்பதுதான் .

 ஏனெனில் எல்லா ஜீவராசிகளும் இயற்கையில் உள்ளதை அப்படியே பயன்படுத்திக்கொண்டு வாழும் போது, மனிதன் மட்டுமே ஒவ்வொரு நிகழ்ச்சியையும், செயலையுமே பகுத்தறிந்து தனக்கு சாதகமாக பயன்படுத்தி வாழ ஆரம்பித்தான். 

இயற்கையில் நெருப்பின் சக்தியை, நீரின் சக்தியை புரிந்து கொண்டு கண்டுபிடிப்புகளை உருவாக்கி வாழ ஆரம்பித்தான். அவன் கண்டுபிடித்த முதல் கண்டுபிடிப்பான நெருப்பின் தொடர்ந்து விவசாயம் என பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு முன்னேறலானான். 

பிரபஞ்சத்தின், இயற்கையின் சக்தியினை, ஆற்றலை, சீற்றத்தை கண்டு ஆராய்ச்சிகள் செய்து முன்னேறியவன் அறிவியலாளர் ஆனான். 

பயந்து வணங்கியவன் மத நம்பிக்கையாளன் ஆனான். 

மனிதன் கண்டுபிடித்த அனைத்து அறிவியல் சாதனைகளும் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இயந்திரப் புரட்சி வந்த பின், காப்புரிமைகள் என்று வந்தபின், உலகமெங்கும் கண்டுபிடிப்புகள் என்பது ஏதோ மேலை நாடுகளுக்கு மட்டுமே சொந்தமானது போல ஒரு பிரமை உண்டாயிற்று. நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட பிறகு அது இன்னும் உறுதிப்படுத்தப்பட்டது.

 ஆசியாவில் முதன்முதலாக கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசு பெற்றவர் இந்திய இயற்பியலாளர் சர் சி.வி. ராமன். 

 ஒளி சிதறலில் இந்த முன்னேற்றத்திற்காக, ராமன் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார் - அறிவியலில் வென்ற முதல் ஆசியர் அவரே. 

 சனாதனவாதிகள் விண்வெளியில் கடவுளர்களைத் தேடிக் கொண்டிருக்கையில், சர் சி வி ராமனுக்கு கடவுள் தெரியவில்லை. ஒளிச்சிதறலே தெரிந்தது. அவர் கண்டுபிடித்த அந்த ஒளி சிதறல் ராமன் விளைவு என்று அழைக்கப்பட்டது. 

திரைப்படங்களில் விருப்பம் இல்லாத அவர், நண்பர்கள் வலியுறுத்தலுக்காக வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணருடைய அவதாரத்தை பற்றிய கிருஷ்ண விஜயம் என்ற திரைப்படத்தை காணச் சென்றார். அரை மணி நேரம் கூட அவரால் அந்த அவதார கூத்துக்களை காண பிடிக்க முடியாமல் Absurd... அபத்தம்.. என்று கூறிவிட்டு திரையரங்கை விட்டு வெளியேறி, தனது ஆய்வரங்கம் சென்று விட்டார். 

பிப்ரவரி 28, 1928 அன்று ராமன் விளைவைக் கண்டுபிடித்தது நினைவு கூர்ந்து தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

1986 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவதற்காக தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு கவுன்சில் (NCSTC) பிப்ரவரி 28 ஐ தேசிய அறிவியல் தினமாக அறிவித்தது

 2026 தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் 'அறிவியலில் பெண்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த பாரதத்தை ஊக்குவிப்பது' என்பது வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் பெண்களின் பங்கை எடுத்துக்காட்டுகிறது. 

2026 தேசிய அறிவியல் தினம் இப்போது ஏன் முக்கியமானது?

அடுப்பங்கரையில் அடைபட்டு கிடப்பதும், பிள்ளை பெற்று தருவதுமே பெண்களின் கடமை என்று காலம் காலமாக சொல்லப்பட்ட நாட்டில் பெண்களுக்கான கல்வி, சமூகத்தில் முன்னெடுப்பு என்பது தடுக்கப்பட்டே வந்துள்ளது. பல்வேறு சமூக சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள், சமூக போராளிகள் ஆகியோரது கடுமையான முயற்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் பிறகுதான், பெண்கள் கல்வி கற்கவும் சமூகத்தில் பல வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்றலும் என்பது தொடங்கிய ள்ளது. இதற்கு ஏராளமான இலக்கிய, வரலாற்று ஆவண சான்றுகளை காண முடியும்.

 இவ்வளவுக்கு பிறகும் ஆராய்ச்சியில் பெண்களுக்கான பங்கு என்பது குறைவாக உள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற இந்தியா கடுமையாக முயற்சித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான துறைகளில் ஆராய்ச்சியாளர்களில் பெண்கள் சுமார் 20-22% மட்டுமே உள்ளனர், மேலும் உலகளவில் ஆராய்ச்சியில் சுமார் 31% பேர் மட்டுமே உள்ளனர். இருப்பினும், 46% இளம் பெண்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர், மேலும் அறிவியல் பட்டதாரிகளில் 35% பேர் பெண்கள். இந்த இடைவெளியை நிரப்புவது சுகாதாரம், காலநிலை மாற்றம், சுத்தமான எரிசக்தி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தீர்வுகளை விரைவுபடுத்தும்.

இந்தக் கருப்பொருள் சரியான நேரத்தில் வருகிறது. உலகளாவிய பெண்கள் அறிவியல் தினத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, இது உத்வேகத்தை உருவாக்குகிறது. வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார தொழில்நுட்பத்தில் பெண்கள் தலைமையிலான தொடக்க நிறுவனங்கள் முதல் உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்கும் எளிய அறிவியல் மாதிரிகளை உருவாக்கும் பள்ளி மாணவிகள் வரை - அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்களுடனும் இது இணைகிறது.

எனவே இந்த தேசிய அறிவியல் தினத்தில் இன்றைய குறிக்கோளை முன்னெடுத்து பெண்களை கல்வி கற்க ஊக்குவிப்பதும், ஆராய்ச்சி திட்டங்களில் வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்க ஊக்குவிப்பதே தினத்தை கொண்டாடுவதன் உண்மையான அர்த்தமாக இருக்க முடியும். 

 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...