சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 28 February 2026

அறம் கூறு அவையம்

 எல்லா காலத்திலும், எல்லா சமுதாயமும் பன்முகத்தன்மை கொண்டதாகவே இருக்கும். பல்வேறு நம்பிக்கைகள், பல்வேறு சமயங்கள், பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்டவராகவே மக்கள் வசிப்பர். ஆனால் அரசும், அரசு நிர்வாக இயந்திரங்களான நீதி, காவல் உள்ளிட்ட அமைப்புகள் எல்லாருக்கும் பொதுவானதாக  வெறுப்பு வெறுப்பின்றி சார்பு நிலை கடந்து  செயலாற்றினால் தான் அந்த சமூகம் சிறந்த சமூகமாக இருக்க முடியும். குறிப்பாக நீதித்துறை மக்கள் அச்சமின்றி அணுகக்கூடிய தங்களுக்கு பாதுகாப்பு, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஊட்டுவதாக இருக்க வேண்டும். இதைத்தான் தமிழ் கூறும் நல் உலகம் சங்க கால இலக்கியங்கள் மூலமாக வலியுறுத்துகின்றன. நீதி தவறி தீர்ப்பளித்த மதுரை மன்னன் மாண்டதும், பொற்கை பாண்டியன் கையிழந்ததும் இலக்கியங்கள் காட்டும் உதாரணங்களாகும். 

இதை விளக்கும் அற்புதமான பாடல் ஒன்று மதுரைக்காஞ்சியிலே வருகிறது... 

நடுவுநிலையுடன் தீர்ப்புக் கூறுவாரோ, கூறமாட்டாரோ என்று அஞ்சி வந்த அச்சத்தையும், அவருக்குத் தோல்வியால் நெஞ்சில் தோன்றும் வருத்தத்தையும், அவர்தம் நெஞ்சு கருதின பொருள் மேல் தோற்றிய பற்று உள்ளத்தையும் போக்கி,  ஒரு கூற்றில் செற்றம் செய்யாமல், ஒரு கூற்றில் உவகை செய்யாமல் நெஞ்சினைப் பாதுகாத்து, துலாக்கோலைப் போல நடுவு நிலைமையுடையவராய் இக்குணங்களால் சிறந்த விரதங்களையுடைய அறநூலைச் சொல்லும் சான்றோர்களும் – மதுரை நகரில் வாழ்ந்தனர்.

( அறம் கூறு அவையம் – நீதி மன்றம் அறநூல் முறைப்படி அறம் கூறும் தருமசனத்தார் அமர்ந்து நீதி அளிக்குமிடம் ) 

 *********************

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி

செற்றமும் உவகையும் செய்யாது காத்து

ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி

சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்

                            மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி 6 : 489 – 49

***************

 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...