இன்று என் தாத்தா (அம்மாவின் அப்பா)ஆ.சிதம்பரம் அய்யா அவர்களின் 125 ஆவது பிறந்த நாள்(25.2.1901)
இவர் மதுரை மாவட்டம் ,மேலூர் வட்டம்,வெள்ளலூர் கிராமத்தில் ஆண்டியப்பன் மருதாயி ஆச்சி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர், பள்ளிக்கல்வி முடித்த கையோடு சுதந்திரம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் பெரியவர்கள் கண்டித்ததால் சிறிது காலம் துறவியாக தேசாந்திரியாக திரிந்த பிறகு, இலங்கை சென்று தொழில் செய்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி இருக்கிறார். அங்குள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக தனது ஸ்டோர் மற்றும் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு நாடு திரும்பினார்.
அவர் முதல் மனைவி மீனாட்சி ஆச்சிக்கு உமையாள் (என் தாயார்) மற்றும் ராமர், லக்ஷ்மணர் ஆகியோர் பிறந்தனர். திடீரென்று உடல் சுகவீனமுற்று மீனாட்சி ஆச்சி காலமானதால், மீனாட்சி ஆச்சியின் சகோதரியான சௌந்தரம் ஆச்சியை திருமணம் செய்தார். அவர்களுக்கு சாந்தா சுந்தரமூர்த்தி ஆகிய இரு குழந்தைகளுக்கு பிறந்தனர்.
சொந்தமாக டிபார்ட்மெண்ட் ஸ்டோரை நடத்தியவர் நாடு திரும்பிய பிறகு வறுமையின் காரணமாக சிறு கடை வைத்து பிழைப்பு நடத்தி இருக்கிறார். சொந்தக் கடை நடத்தியவன் பிறரிடம் வேலைக்கு செல்வதா என்று எண்ணி கடைசி வரை பிடிவாதமாக சுய சம்பாத்தியத்தில் காலத்தை கடத்தினார் வாழ்நாள் முழுக்க யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் சொந்த காலில் வாழ்ந்தவர், என் மீதும் எனது மனைவி முத்துமணி மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். தனது 85வது வயதில் (1986) என்னுடன் ஆதனக்கோட்டையில் இருந்த போது காலமானார்.
.1957ல் இந்தியா திரும்பியபோது தனுஷ்கோடி துறைமுகம் வழியாக நாடு திரும்பினார். அவர் வந்த பின் சிறிது காலத்தில் தனுஷ்கோடி துறைமுகம் கடல் சீற்றம் மற்றும் புயலால் அழிந்தது தற்செயலாக அவரது பாஸ்போர்ட்டை பார்த்தபோது கிடைத்தது விபரங்கள்..
எ ன்றென்றும் எங்கள் நினைவில் இருந்து ஆசீர்வதித்து கொண்டிருக்கிறார்.









நினைவு கொள்ள வேண்டிய வரலாறு.
ReplyDelete