சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 28 October 2025

தந்தையை தேடுகிறேன்


 இளைஞரால்

 வெறுக்கப்படும்,

 மூத்தவர்களால்

 விரும்பப்படும்,

வளமையான

கவிதை இது..... 


தந்தை எல்லோருமே.... 


குழந்தையாயிருக்கையில்

கதாநாயகனாய்

 காட்சியளித்தார்...


இன்னும்

வருடங்கள் கழிகையில்

ஏமாளியாய் தெரிந்தார்... 


இளைஞனான போது

 வில்லனாய்

 மாறிப்போனார்.. 


அனுபவம்

 வருகையிலே 

அறிஞனாய் தெரிந்தார்..


ஆதரவு 

தேடுகையில்

 அகப்படாமல் போனார்.. 


இரத்த கண்ணீர் 

வடிக்கையில்

இல்லாமலே போனாரே... 




No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...