சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 1 October 2025

அறிவுலகம் தலைகுனிந்ததே..


அன்ன ஆகாரமின்றி 

அருந்தஅரைக்குவளை

 நீரின்றி உணர்விழந்த   

பசித்த கண்களாய்    

விண்மீன்கள் நோக்கி

 விடியலுக்காய் நிற்கையில்

 இஸ்ரேலியரின் குண்டினிற்கு

 மடிகிறாரே பாலஸ்தீன

 பெண்கள் குழந்தைகளென... 

 கண்ணீர் சிந்துகிறதே

 அகிலமே அவர்களுக்காய்.. 




அன்னம் மறந்து         

  அருந்த நீர் மறந்து

 அருமையான குடும்பம்

 அத்தனையும் மறந்து

 சினிமா நட்சத்திரம்     

 சிரித்த முகம் காண     

மகளிர், குழவியென 

 நசுங்கி செத்தாரே

 நாற்பதுக்கும் மேல.... 


அறிவுலகம்தலைகுனிந்ததே

 அவமானம் தாங்காமல்.. 








1 comment:

  1. மனிதக் கூட்டம் மந்தை ஆடுகளின் கூட்டம் போல் ஆனபடியால் மாந்தரைக்காக்க மகான் தான் வந்து பிறக்க வேண்டும். சிந்தித்து செயல்பட அனைவருக்கும் சீரிய உள்ளம் வேண்டும். விட்டில் பூச்சிகளாய் வேதனை தரும் வேண்டாத வினையைத் தூண்டும் வெட்டி வெளிச்சத்தை நோக்கி விடியல் தரும் விளக்கென்று விளையாட்டாக சென்று விழி திறந்து விழித் திருந்தது வினையாக வந்தது சேர்ந்தது. விதியாக கொன்று குவித்தது. என்று தணியும் இந்த அடிமைகளின் மோகம். எல்லாம் வல்ல இறயருளே இறங்கி வா எங்கள் பிரபஞ்சமே.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...