சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது குழந்தைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி ஒரு பாடல் பாடப்பட்டது. "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுதே" என்ற நாமக்கல் கவிஞருடைய பாடலை பாடினார்கள்.
இதைக் கேட்டவுடன் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கத்தி இன்றி ரத்தம் இன்றி சும்மாவா கிடைத்தது சுதந்திரம். கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேருக்கு மேல் உயிர் தியாகம் செய்து கோடிக்கணக்கான பேர் தங்களது சொத்துக்களை உடல் பொருள் ஆவி என அனைத்தையும் தியாகம் செய்து மக்கள் இயக்கமாக மாறிப்பெற்ற சுதந்திரத்தை மிக எளிமையாக சொல்லி விட்டார்களே என்ற வார்த்தை தான் அது. அவருடைய பாடல் மீது எனக்கு வருத்தம் இல்லை. அந்த தியாகம் மக்களுக்கு போய் சேரவில்லையே என்கிற வருத்தம் தான்.
இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சி,அதற்கு முன்னரே எங்கும் அங்கு நடந்த பல்வேறு அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான போர்கள் , என பல்வேறு போராட்டங்களாக தொடர்ந்து, கடைசியாக நடைபெற்ற கப்பற்படை எழுச்சி வரை நடைபெற்ற அனைத்து போராட்டங்கள், மக்கள் இயக்கங்கள், அப்படி தியாகங்களுக்கு பிறகு சுதந்திரம் கிடைத்தது என்ற வரலாற்றை மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டியது தேசபக்தி உள்ள ஒவ்வொருவரது கடமை. எனக்கு கிடைத்த பல்வேறு புகைப்படங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன்..
1857 புரட்சியின் தலைவர் பேகம் ஹஸ்ரத் மஹால் பிரிட்டிஷ் சிறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட மம்மு கான் அவர்களின் அரிய படம்.
மூன்று புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டனர், அவர்களின் கைகள் இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டன. இறுதியில், அவர்கள் தூக்கிலிடப்பட்டனர், அடிமைத்தனத்தின் தளங்களிலிருந்து இந்தியாவை விடுவித்தனர், இன்று நாம் திறந்தவெளியில் சுவாசிக்கிறோம்.


Tiruppur Kumaran, panjab singam lala lajapathi roy, jalian walapak
ReplyDeleteஇன்னும் நிறைய விபரங்கள், படங்கள் வரும்...
Delete