காத்திருங்கள்.. காலம் கனியும் வரை காத்திருங்கள்...
அததற்கான காலம்வரை அதிக நேரம் கொடுத்திடுங்கள்...
மண் விதையை முளைத்திட அவசரப்படுத்துவதில்லை..
விடியல் வேண்டுமென விரட்டுவதில்லை சூரியன் இருளினை ....
மெதுவாகக் கட்டப்பட்டது வீழ்ந்து விடுவதில்லை விரைவில் ஒருபோதும்.
ஒவ்வொரு தாமதமும் அடித்தளத்தை வடிவமைக்கிறது..
ஒவ்வொரு மௌனமும் உங்கள் வேர்களை வலுப்படுத்துகிறது..
காத்திருங்கள் விளைவு அற்புதமாக இருந்திடவேண்டுமெனில்..
காத்திருங்கள் காலம் கனியும் வரை காத்திருங்கள்...
No comments:
Post a Comment