சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 28 March 2026

சிரிப்பே சிறந்த மருந்து...

சிரிப்பு நல்ல மருந்து. சிந்தனையை தூண்டி அறிவாற்றலை உயர்த்தும். 

துன்பங்கள் நேரிடும் போது ஆற்றுப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு சிரிப்பு மிகவும் அவசியம் துக்கங்களிலிருந்து விடுபட சிரிப்பு அவசியம் ஆகவே சிரிப்பு என்பது இல்லாவிட்டால் மனிதனுடைய வாழ்க்கை என்பது எந்திரமாகிவிடும் அல்லது நரகமாகிவிடும் அதனால் தான் திருவள்ளுவர் இக்குறளினை அருளியுள்ளார் 

"இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்." 

துன்பங்கள் வரும் போது, ​​மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக; துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை

 தன்னையே பார்த்துச் சிரிப்பவனுக்கு, சிரிப்பதற்குரிய விஷயங்களுக்கு ஒருபோதும் பஞ்சம் ஏற்படுவதில்லை.” - எபிக்டெட்டஸ்

உங்கள் சொந்தக் குறைகள், தவறுகள் மற்றும் முழுமையற்ற தன்மைகளைப் பார்த்து நீங்கள் புன்னகைக்க முடிந்தால், வாழ்க்கை மிகவும் இலகுவானதாக மாறிவிடுகிறது. சுய விழிப்புணர்வு பணிவும் ஒன்றிணையும்போது, ​​அவை நம்மை அவமான உணர்விலிருந்து அச்சத்திலிருந்து விடுவிக்கின்றன என்று எபிக்டெட்டஸ் நமக்கு நினைவூட்டுகிறது. நமது மனித இயல்பை மறைப்பதற்குப் பதிலாக, நாம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் - அதன் மூலம், இந்த ஆழமானதொரு வலிமையை நாம் கண்டடைகிறோம்.

இன்று நாடிருக்கும் நிலைமைக்கு மனம் நொந்து போகும் நிலைதான் உள்ளது. எனவே சிரிப்பினும் அருமருந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஏனென்றால் இந்த உலகத்தில் உள்ள யாரையும் நம்மால் திருத்த முடியாது. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...