சுதந்திரம் என்பது தடையின்றி நினைத்ததைச் செய்யவும், விரும்பியபடி வாழவும், பேசவும், மாற்றங்களை உருவாக்கவும் உள்ள உரிமையாகும். தனிமனித சுதந்திரம் பாலின சுதந்திரம் இனத்தின் சுதந்திரம் நாட்டின் சுதந்திரம் எதுவாக இருந்தாலும் ஒருத்தனை வெறுமனே அடிமை விலங்கிலிருந்து விடுவிப்பது மட்டுமல்ல அவனது பொருளாதார சமூக அடிமைத்தனங்களில் இருந்து விடுவிப்பது என்பதுதான்.
ஐநா சபை, சுதந்திரத்தை மனித உரிமைகளின் அடிப்படை தூணாகக் கருதுகிறது. குறிப்பாக கருத்துச் சுதந்திரம் (பிரிவு 19), தனிநபர் உரிமை, மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகள் மூலம் உலகெங்கிலும் சமாதானம், ஜனநாயகம், மற்றும் அடிமைத்தனமற்ற சுதந்திரமான வாழ்வை உறுதி செய்வதே ஐநாவின் முக்கிய நோக்கமென்று அறிவித்துக்கொள்கிறது.
ஆனால் பொருளாதார ரீதியாக நாடுகளை சுரண்டுவதற்கு எந்த விதமான ஒழுங்கு கட்டுமுறையும் இன்றி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்றைக்கு மனித உரிமைகள், நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றை தூக்கி குப்பையில் போட்டுவிட்டன . ஐநா சபையை வெறும் பேச்சு மன்றமாக ஆக்கிவிட்டு உலக மக்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் எதார்த்த உண்மை.


No comments:
Post a Comment