சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 23 March 2026

எல்லாம் கவிதை மயம்

இளம் குழவியின்

குழறும் மழைச்சொல்லில்...

ஆரிராரோ பாடி

அழும் குழந்தை

அமர்த்தும் அன்னை சொல்லில்..

கார்காலத்து மண்டூகங்களின்

 கூட்டுக்கூச்சலில்..

கரைந்து உண்ண

அழைத்திடும் காகத்தின்

அறைகூவலிள்..

இலக்கணம் ஏதுமறியா

காதற்கிருக்கனின்

பிதற்றலில் கூட

இருக்கலாம்...

எல்லாம் கவிதை மயம்...


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...