இளம் குழவியின்
குழறும் மழைச்சொல்லில்...
ஆரிராரோ பாடி
அழும் குழந்தை
அமர்த்தும் அன்னை சொல்லில்..
கார்காலத்து மண்டூகங்களின்
கூட்டுக்கூச்சலில்..
கரைந்து உண்ண
அழைத்திடும் காகத்தின்
அறைகூவலிள்..
இலக்கணம் ஏதுமறியா
காதற்கிருக்கனின்
பிதற்றலில் கூட
இருக்கலாம்...
எல்லாம் கவிதை மயம்...
No comments:
Post a Comment