சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 23 March 2026

அரை உண்மை

 உலகில் மிகவும் வலிமையானது உண்மை. உலகில் மிக மோசமானது அரை உண்மை. 

என்னடா பாதி உண்மை இருக்கிறதே, இதை போய் மோசம் என்று சொல்கிறார்களே என்று கூட நினைக்கலாம். 

பொய் என்பது உண்மைக்கு நேர் எதிரானது, அது எப்போதுமே ஆபத்தானது தான், அதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது, அதோடு அனுசரித்துப் போகவும் முடியாது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

உண்மை என்பது சத்தியத்தின் வடிவம். அதை நாம் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதுதான் சத்தியம். அது நிரந்தரமானது. 

ஆனால் இந்த இரண்டிற்கும் நடுவே இருக்க கூடிய உண்மை இருக்கிறது அல்லவா அது மிகவும் ஆபத்தானது, மோசமானது, கேவலமானது. 

ஏனெனில் உண்மையை சென்றடைவதை அது தடுக்கிறது, என்பதை விட அது உண்மை முகமூடி மாட்டிய பொய்யின் வடிவம். ஆனால் அது உண்மை கிடையாது. ஒருவர் உண்மையை தேட விடாமல், திசை திருப்பி, பொய்யை உண்மை என்று நம்ப வைக்கும் பச்சை அயோக்கியத்தனம். ஏனெனில் அந்த பாதி உண்மைக்குப் பின் மோசமான பொய் தான் இருக்கிறது. அந்த பொய்யை உண்மை என்று நம்ப வைத்து கழுத்தறுக்கிறது.

 அதனால் தான் அரை உண்மை பொய்யை விட ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது. 

" அரை உண்மை என்பது பொய்யின் மிகவும் ஆபத்தான வடிவமாகும், ஏனெனில் அதை மறுக்க முடியாத தர்க்கத்தின் ஒரு பகுதியைக் கொண்டு நியாயப்படுத்த முடியும்." - மேன்லி ஹால்


ஒரு அரை உண்மை தவறாக வழிநடத்துகிறது, ஏனெனில் அது நியாயமானதாகத் தோன்றும் ஒன்றின் பின்னால் ஒளிந்து கொள்கிறது. அது துல்லியத்தையும் திரிபையும் கலந்து, கேள்வி கேட்பதை கடினமாக்குகிறது, ஏற்றுக்கொள்வதை எளிதாக்குகிறது. மேலோட்டமாகத் தர்க்கரீதியாகத் தோன்றுவதை விட ஆழமாகப் பார்க்கவும், நம்புவதற்கு அல்லது செயல்படுவதற்கு முன்பு முழுமையான சித்திரத்தை ஆராயவும் ஹால் நமக்கு நினைவூட்டுகிறது.

துரதிஷ்டவசமாக நம் வாழ்க்கையில் அரை உண்மையைத் தான் அதிகம் கண்டு கொண்டிருக்கிறோம் அரசியல்வாதிகளிலிருந்து வியாபாரிகளிலிருந்து, பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் வரை கூறும் அன்றாட வாழ்வில் நாம் அரை உண்மையை தான் உண்மை என்று நம்பி அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கிறோம்... 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...