நெறிசார்ந்த காரணங்களுக்காக, நெறிபிறழ்ந்த செயலைச் செய்யாதே.” - தாமஸ் ஹார்டி
ஒரு நல்ல காரியத்துக்கு பொய் சொன்னா தப்பில்லை என்றெல்லாம் நிறைய சப்பைக் கட்டுகளை கேட்டிருக்கிறோம்.
தர்மத்திற்கான அல்லது அறத்திற்கான வெற்றியை அடைய அறம் பிறந்த வழியில் சென்றால் தவறில்லை என்று நிறைய புராணக் கதைகள் புருடா கதைகள் எல்லாம் உண்டு .
ஆனால் அறம் சார்ந்த, அறத்தை மட்டுமே நேசிப்போர், அறவழி காட்டுவோர் ஒருபோதும் அறத்திற்காக, அறம் பிறழ்ந்த வழிமுறைகளை கூறுவது இல்லை. ஏற்றுக் கொள்வதும் இல்லை.
நல்ல நோக்கங்களைக் கொண்டு, தீய செயல்களை நியாயப்படுத்துவதற்கு எதிராக இக்கூற்று எச்சரிக்கிறது. அறநெறி என்பது வெறும் சாக்குப்போக்குகளையோ அல்லது விளைவுகளையோ சார்ந்ததல்ல; மாறாக, அது அச்செயலின் உள்ளார்ந்த நேர்மையையே சார்ந்தது என்று ஹார்டி வலியுறுத்துகிறார். உன்னதமான இலக்குகளை அடைவதற்காகவே எனினும், நாம் நெறிசார்ந்த எல்லைகளை மீறும்போது, நாம் காக்க முற்படுவதாகக் கூறும் அதே அறக்கோட்பாடுகளையே பலவீனப்படுத்துகிறோம்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்கிறார் திருவள்ளுவர்.
தூய்மையான நெஞ்சுடன் அறவழியில் சென்று, அடையும் வெற்றியால், புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது. எனவே அறம் பிறழ்ந்து, நெறி பிறழ்ந்த வழியில் வரக்கூடிய வெற்றி என்பது நெறிசார்ந்த நோக்கமாயினும் தவறே...
இன்று நாடுகளில் தொடங்கி, அரசியல் கட்சிகள், வர்த்தக நிறுவனங்கள் என தனி நபர்கள் வரை வெற்றி பெறுவதற்காக எந்த வகையிலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நெறியான விஷயங்களை வென்றிட நெறியற்ற முறையில் அடைந்திட முயற்சிக்கக் கூடாது என அறிஞர்கள், அறவழி செல்வோர் கூறுகையில், நெறியற்ற, நேர்மையற்ற செயல்களை விரும்பும் அமைப்புகள் நேர்மையான வழியிலா செல்லப் போகிறார்கள்?!
No comments:
Post a Comment