பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்" (குறள் 475) என்பது திருவள்ளுவர் அருளிய திருக்குறள் ஆகும்.
மிகவும் லேசான மயிலிறாக இருந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும்,அதேபோல வலிமை குறைந்தவர் அல்லது மென்மையானவர் என்று ஒருவரை அற்பமாக எண்ணி, அவர்களுக்குத் தாங்க முடியாத அளவு பொறுப்பையோ, பணியையோ கொடுத்தால், அது அவர்களின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்த்தும் குறள் இதுவாகும்.
இந்தக் குறளின் உண்மையான பொருளைப் படித்த காலத்தை விட பணிக்கு வந்த பிறகு கற்றுக் கொண்டதே அதிகம்.
ஒரு நண்பருக்கு உதவ போய், என்னை பலிகடா ஆக்கி கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் பணி மாற்றம் செய்தார்கள். வேலைக்கு போவதற்கு என்ன பலிகடா என்று நினைக்கிறீர்களா?!
ஒரு நாளைக்கு சராசரியாக 500 லிருந்து 600 வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்வார்கள். நான் முன்பே குறிப்பிட்ட மாதிரி ஒரு நோயாளிக்கு நான்கு அல்லது ஐந்து மருந்துகளை வைத்துக் கொண்டால் எவ்வளவு பேருக்கு மருந்து கொடுக்க எப்படி கஷ்டப்பட வேண்டும், என்பதை புரிந்து கொள்ள முடியும். இது தவிர சராசரியாக 40 லிருந்து 50 உள் நோயாளிகள் வேறு. அரசினுடைய மருத்துவ வழிகாட்டுதல் தரும் மெடிக்கல் கோடில் 150 வெளிப்புற நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுனர் 75 உள் நோயாளிகளுக்கு ஒரு மருந்தாளுனர் நியமிக்கப்பட வேண்டும்.
அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் பணியாற்ற வேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
நான் தற்செயலாக மருத்துவமனையின் ஒரு அறையை சுத்தம் செய்ய வேண்டி இருந்தபோது பழைய பதிவேடுகளைப் பார்க்க நேரிட்டது. கரையான் அரித்த பழைய சம்பளப் பதிவேட்டை பார்த்தபோது, 1930 ஆம் ஆண்டு இரு மருத்துவ அலுவலர்கள், ஒரு கம்பவுண்டர், ஒரு மகப்பேறு உதவியாளர், ஒரு ஆண் செவிலி உதவியாளர், ஒரு ஆண் துப்புரவாளர் ஒரு பெண் துப்புரவாளர் பணியாற்றியதாகத் தெரிந்தது. இன்னும் சொல்ல போனால் 1901 ஆம் ஆண்டு வருடத்திய பதிவேடு கூட நான் பார்த்தேன். அப்படி என்றால் குறைந்தது 125 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த மருத்துவமனை அது.(Local fund dispensary, sub Taluk hospital, Dispensary, Primary Health Centre, Taluk Hospital) உள்ளாட்சி மருந்தகம்,பின்பு ஆரம்ப சுகாதார நிலையமாக அதன் பின் தாலுகா மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது என்று பல்வேறு மாற்றங்களைக் கண்ட மருத்துவ மணையாகும்.
அன்றைக்கு ஒரு கம்பவுண்டர். இன்றைக்கும் ஒரே மருந்தாளுநர். ஒரே பணியிடம் என்றால் நிர்வாகத்திற்கும் அரசிற்கும் என்ன மாதிரியான மனோபாவம், புத்தி இருக்கும் என்பது உங்களுடைய சிந்தனையை விட்டுவிடுகிறேன்.
ஒருமுறை மருத்துவமனை மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது மருத்துவமனை வளர்ச்சியைப் பற்றி நிறைய விஷயங்கள் பேசப்பட்டன. நான் அனைவருடைய அனுமதியையும் பெற்று மருத்துவமனை நிலை குறித்து பேசினேன். நூறாண்டு காலம் செயல்பட்ட மருத்துவமனை வளர்ச்சி, நோயாளிகளின் எண்ணிக்கை அனைத்தையும் விளக்கி விட்டு பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் மாறவில்லை என்பதை எடுத்துரைத்தேன். எல்லோரும் தீர்மானங்களை போடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள். பேரூராட்சி தலைவர் மட்டும் அதைப் பற்றி இங்கே ஏன் பேசுகிறீர்கள் இங்கு பிண பரிசோதனை நடைபெறுவதில்லை, அதை எப்பொழுது நடத்தப் போகிறீர்கள் என்று கேட்டார். நான் ஏற்கனவே இருக்கக்கூடிய பிரச்சனைகள் இப்படி இருக்கும்போது எப்படி செய்ய முடியும் என்று பணியாளர் பிரச்சினையை பற்றி பேசினேன். வாக்குவாதம் ஆகி வெளிநடப்பு செய்து விட்டார். அவ்வளவுதான் ஆகமொத்தம் இந்நிகழ்ச்சி நடந்து 25 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதே நிலைமைதான் மாறவே இல்லை.
இது ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோல ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கைக்கு கொஞ்சம் கூட பொருத்தமே ஒரு மருந்தாளுநர் மட்டுமே பணிபுரியக்கூடிய மன நிலையங்கள் உள்ளன.
இதனால் மனவேதனைக்கு ஆளாகி நோய் வாய்ப்பட்டு செத்து சீரழிந்த மருந்தாளுநர்கள் மிக அதிகம் இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது என்று தெரியவில்லை.
Antha hosptitalil nanum paniyatriullan sir
ReplyDeleteKastam sir
என்று தணியும் இந்த சுதந்திர தாகம். ? S. Selvaraj. RTD MSO COIMBATORE
ReplyDelete