சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 171 வது திரைப்படம்.
ஒரு முன்னாள் கூலி தனது நன்பர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் திரைப்படம் இது.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் , கடத்தல்காரர் சைமன்( நாகார்ஜுனா) தனது உதவியாளர் "தயாள்"(சௌபின் ஷாகிர்) உடன் தங்கம் மற்றும் ஆடம்பர கடிகாரங்களை கடத்தும் போர்வையில் மர்மமான தொழில் செய்கிறார். சைமனின் மகன் அர்ஜுன்(கண்ணா ரவி ) , குற்றவியல் தொழிலை நிராகரித்து, அதற்கு பதிலாக சுங்க அதிகாரியாக பணிபுரிகிறார். கூலியாக உள்ளே நுழைந்து துப்பறியும் ஒரு ரகசிய போலீஸ் அதிகாரியை தயாள் கூலிகள் முன்பு கொன்றுவிடுகிறார், அந்த கும்பலில் உள்ள மற்றொரு ரகசிய அதிகாரியை காட்டிக்கொடுப்பவருக்கு ₹ 2 கோடி வெகுமதியை வழங்குகிறார்.இதன் மூலம் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கிறார்.
சென்னையில் ,தேவா என்று அழைக்கப்படும் முன்னாள் கூலி தேவராஜ் (ரஜினிகாந்த் ) ஒரு மேன்சனை நடத்துகிறார் . அவரது நண்பர் ராஜசேகரின்(சத்யராஜ்) மரணத்தை அறிந்ததும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார். அவரது நன்பரின் மரணத்தில் ஐயம் கொள்கிறார். ஆனால் ராஜசேகரின் மகள் பிரீத்தி(ஸ்ருதி ஹாசன்) தனது சகோதரிகளின் பாதுகாப்பை கருதி தேவாவிற்கு ஒத்துழைப்பு தர மறுத்து விடுகிறாள்.. பிரேத பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், தேவா மார்பு அதிர்ச்சிக்கான ஆதாரங்களை அறிந்துக்கொள்கிறார்.
ராஜசேகர் சுற்றுச்சூழல் மாசு படாமல் விலங்குகளின் உடல்களை எரிக்க ஒரு மின்சார நாற்காலியைக் கண்டுபிடித்தார் . அவரது காப்புரிமை நிராகரிக்கப்பட்டது. அவரது கண்டுபிடிப்பை பயன்படுத்தி, சைமன் தன்னால் கொல்லப்பட்டவர்களை ஆதாரங்கள் இல்லாமல் எரித்து அழிப்பதற்காக அதை மனித பயன்பாட்டிற்கு மாற்றியமைக்கும்படி அவரை வற்புறுத்தினார்.
இந்த சூழலில் ராஜசேகர் கொல்லப்பட்டதால் அந்த நாற்காலியை எப்படி இயக்குவது என்று அறிந்த ப்ரீத்தியை தயாள் கடத்த முயற்சிக்கிறாள், ஆனால் தேவா தலையிட்டு அவளை காப்பாற்றுகிறார். அவரது ஆலோசனையின்படி நாற்காலியைப் பயன்படுத்தி தயாளனால் கொலை செய்யப்பட்டவர்களை எரிக்கிறாள். தேவா பிரீத்தியை வேலையை விட்டுவிடச் சொன்னாலும் தன் சகோதரிகளை ஆதரிக்க விரும்புவதால் அந்த வேலையை தொடர்கிறாள்.
ஒரு கட்டத்தில சைமன் தயாளை ஒரு ரகசிய போலீஸ்காரர் என்றறிந்து,தாக்கிவிட்டு தேவாவை அடக்கம் செய்ய சொல்கிறார் .
தயாள் மரணம் அடையாத சூழலில் அவனை புதைக்காமல் ப்ரீத்தியுடன் தப்பிக்க அனுப்பி விடுகிறான் தேவா.
தயாள் தான் ராஜசேகரை கொன்றவன் என்ற ஆதாரத்தை தேவாவிடம் காட்டுகிறான் சைமன்.
தப்பி பிழைத்த தயாள் ப்ரீத்தியை பனைய கைதியாக வைத்துக்கொண்டு தேவாவை மிரட்டுகிறான்.
. தயாளின் உத்தரவைப் பின்பற்றி, தேவா துறைமுகப் பெட்டகத்தை அணுகி, கூலிப்படையினரை குறிவைத்து சைமன் கும்பல் செய்யும் இதயக் கடத்தல் வளையத்தைக் கண்டுபிடிக்கிறார்.
அர்ஜுனைக் கொல்ல வேண்டும் என்பது ஒரு உத்தரவு, ஆனால் தேவா அவனை விட்டுவிட்டு, ஒரு படத்தில் தன் காதலனுடன் ஓடிப்போகச் சொல்கிறான். தயாள், பிரீத்தியை ஒரு கூரையின் மேல் வைத்து மிரட்டி பழிவாங்குகிறான், ஆனால் தேவா அவனது உண்மையான பெயர் திலீப் என்றும், திருச்சூரில் கேரள காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய காவல்துறை அதிகாரி என்றும் கூறி அவனை அமைதிப்படுத்துகிறான்
பின்னர் தேவா தயாளின் மனைவி கல்யாணியை (ரக்ஷிதா ராம்) கைது செய்கிறார், அவள் அர்ஜுனின் காதலியாக உண்மையில் ஏமாற்றுகிறாள் என்பது தெரியவந்தது, மேலும் பிரீத்தியை விடுவிக்கக் கோருகிறாள். கல்யாணி தன்னை விடுவித்துக் கொண்டு, ரவியைக் கொன்று, தானும் தயாளும் இரகசிய கூட்டாளிகள் என்பதை வெளிப்படுத்துகிறாள். பிரீத்தியைத் துரத்த தயாளுக்கு உத்தரவிடுகிறாள், அவள் ஒரு ரயிலில் தப்பிக்கிறாள், ஆனால் ராஜசேகரின் குறியீட்டைப் பயன்படுத்தி தேவாவை அழைக்கிறாள், அவள் தேவாவின் மகள் என்பதை வெளிப்படுத்துகிறாள். தேவாவின் உதவியாளர் தயாலிடமிருந்து அவளைப் பாதுகாக்க தன்னைத் தியாகம் செய்கிறார், அவர் உயிர் பிழைக்கிறார். கல்யாணி தயாளிடம் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்குச் செல்லச் சொல்கிறாள். தயாள் அர்ஜுனை அங்கே காண்கிறாள். தயாள் சைமனுக்கு போன் செய்து, அவன் உயிருடன் இருப்பதை வெளிப்படுத்தி, அர்ஜுனை அவன் முன் கொல்கிறான். சைமன் சென்னைக்குச் சென்று, தேவா மற்றும் பிரீத்தியின் சகோதரிகளைக் கொல்ல தேவாவின் மாளிகைக்கு தனது ஆட்களை அனுப்புகிறான், ஆனால் தேவா தனது லெப்டினன்ட் கலீஷா(உபேந்திரா) மற்றும் தேவாவுடன் பணிபுரிந்த 18 கூலிகளின் உதவியுடன் சைமனின் ஆட்களைக் கொன்றுவிடுகிறான்.
சென்னையை அடைந்ததும், கல்யாணி பிரீத்தியைப் பிடிக்கிறாள், ஆனால் சைமனின் ஆட்களால் அவள் கடத்தப்படுகிறாள். சைமன் தயாளுக்கு முன்பாக கல்யாணியை கொன்று, பின்னர் ப்ரீத்தியின் இதயத்தை எடுக்க அவளைப் பிடிக்கிறான்.
கப்பலில் புகுந்த தேவா, 30 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்திய நகரமான மண்ட்வாவில் கூலி தொழிற்சங்கத் தலைவராக சைமனின் தந்தை சேவியர் மற்றும் அவரது கூட்டாளி கக்கர் ஆகியோரின் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய தனது கடந்த காலத்தை வெளிப்படுத்துகிறார். போதைப்பொருள் கடத்தலை மறைக்க 100 கூலிப்படையினரைக் கொல்ல முயன்றபோது, தேவாவும் கலீஷாவும் ஒரு கிளர்ச்சியை நடத்தி, 70 கூலிப்படையினரை விலைக்கு வாங்கி சேவியரை ஒழித்தனர். ஒரு இளம் சைமன் தனது தந்தையின் மரணத்தைக் காண முயன்றார், ஆனால் அவரது தாயார் அதைச் செய்வதைத் தடுத்தார், இது அவரது வாழ்க்கையில் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வாக மாறியது. ப்ரீத்தி தனது மகள் என்று சைமனிடம் கூறி, தேவா சண்டையிட்டு அவரைக் கொன்றுவிடுகிறார், மேலும் கூலிப்படையினர் கப்பலை அழிக்கிறார்கள். பின்னர், தேவா, கலீஷா, ப்ரீத்தி மற்றும் அவரது சகோதரிகள் கக்கரின் மகன் என்று தெரியவரும் உலகளாவிய சிண்டிகேட் தலைவரால் கடத்தப்பட்டு பாலைவனத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். இதனால் ஈர்க்கப்பட்ட தஹா( அமீர் கான்) , தேவாவுக்கு தனது வலது கையாக ஒரு இடத்தை வழங்குகிறார்; தனது கூலிப்படையினரை காப்பாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேவா ஒப்புக்கொள்கிறார். தயாள் இறுதியில் பிடிக்கப்பட்டு உயிருடன் புதைக்கப்படுகிறார்.
ப்ரீத்தியும் அவளுடைய சகோதரிகளும் வெளிநாடு சென்றுவிடுகிறார்கள், தேவா தனது தந்தை என்று தெரியாமல் அவரை மன்னித்து, அவரது பிரியாவிடையில் அவரை "மாமா" என்று அழைக்கிறார்கள்.
படத்தில் போலீஸ், கோர்ட், அரசு நிர்வாகம் எந்த சட்ட ரீதியான அமைப்புமே இல்லாமல், ஒரு தனிநபர் ஒரு மிகப்பெரிய கூட்டத்தை தனது சிறு நண்பர் கூட்டம் மூலம் அழித்து நாட்டை பரிபாலனம் செய்கிறார்.
ஆரம்பத்திலிருந்து யாராவது, யாரையாவது கொன்று கொண்டே இருக்கிறார்கள். எந்த மீடியாவிலும் எதுவுமே வருவதில்லை. எல்லா திரைப்படங்களிலும் கடைசி காட்சியிலாவது போலீசும், போனால் போகிறது என்று நீதிமன்றமும் வரும். இந்தப் படத்தில் அதுவும் இல்லை.
ஆயுதங்கள், வெடிகுண்டுகள் என ஒரு கப்பலையே, மிகப்பெரிய அமைப்பையே தகர்த்தெறியும் அளவிற்கு குண்டு வெடிப்பு எல்லாம் திரைப்படம் முழுக்க வரும். ஆனால் அரசு என்று ஒன்று இருப்பதாகவே தெரியாது.
அந்த படத்தில் காட்டப்பட்ட காட்சியில் ஒரே உருப்படியான காட்சி தொழிலாளர்கள் போராடினால் போலீஸ் வந்து அவர்களை அடித்து உதைத்து வதைக்கும் என்கிற காட்சி மட்டும் தான்.
ஆனாலும் தொழிலாளர் பிரச்சினையை தனிநபராக கூறி கூலி தேவா அவரே தீர்த்து வைப்பார். படத்தில் யார் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.
கதை இதுதான்.
காதில் பூச்சுற்றினால் பரவாயில்லை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சுற்றினால் என்ன செய்வது?!..
உண்மையைச் சொல்லப்போனால் இது கூலி படத்திற்கான விமர்சனம் அல்ல. ஒட்டுமொத்தமாக தமிழ் திரைப்படங்களில் மிகப்பெரிய முன்னணி நடிகர்கள் நடித்துவரும் எல்லா மசாலா திரைப்படங்களுக்கான விமர்சனம் தான் இது.
திரைப்படத்தை தயாரித்தவர்கள், இயக்குனர்கள், தமிழ் சினிமாக்களை குப்பையாக தமிழ் மக்களிடையே குவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை.
ஆனால் குப்பை சினிமாக்கள் தான் மிக அதிகமாக ஓடி அதிக மக்களால் பார்க்கப்பட்டு வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை.
நூற்றுக்கு நூறு எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதேபோல சற்று மிகைப்படுத்தி, காட்சிகளை மக்கள் ரசிக்கும் வகையில் எடுக்கலாம் என்பதிலும் தப்பில்லை.
ஆனால் அதீத கற்பனையோடு, மிகப் பிரம்மாண்டங்களோடு, ஏராளமான வன்முறை காட்சிகளோடு, அறிவுக்குப் பொருத்தமே இல்லாத கதை அம்சத்தோடு, படங்களை எடுத்து குவிக்கிறார்களே., அதையும் இந்த மக்கள் பார்த்து ரசிக்கிறார்களே என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்..
கதாநாயகன் எதிரிகளை கொன்று குவித்து கொண்டே இருக்கிறார். எத்தனை பேர் என்ற எண்ணிக்கையில் எண்ணவே முடியாது. சாதாரண கைத்துப்பாக்கியால் சுடுகிறார், சுடுகிறார், சுட்டுக் கொண்டே இருக்கிறார்.. இவர் சுடுவது பூராகவும் குறி தவறாது எதிரிகளை கொன்று குவிக்கிறது. எதிரிகள் நூறு பேர் சுட்டாலும் ஒரு குண்டு கூட இவர் மேல் பாயாது.. அப்படியே பாய்ந்தாலும் அந்த காயத்தோடு இன்னும் நூறு வரை அடித்தது துவம்சம் செய்வார். சண்டை போடுவார்... ஏராளமாய் முத்த காட்சிகள், படுக்கையறை காட்சிகள்.. இவை தான் மேலைநாட்டு திரைப்படங்களின் இலக்கணங்களாக அமைந்துள்ளன.
அதையே இங்கு காப்பியடிப்பது என்பது வெறும் தற்செயலான நிகழ்ச்சி அல்ல. அதற்கு ஒரு உள்நோக்கம் உண்டு.
மனிதன் தன் பிரச்சனைக்கான காரணங்களை அறிந்து கொண்டு விடக்கூடாது. சிந்திக்கக் கூடாது. ஒரு மயக்கத்திலேயே இருக்க வேண்டும். மாயையில் இருக்க வேண்டும் அல்லது யாராவது ஒரு ஹீரோ நம்மை வந்து காப்பாற்றுவார்கள் என்ற கற்பனையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் அது.
கலை மக்களுக்காகவே என்பார்கள். மக்களுக்கான ரசனையை வளர்ப்பதும், மக்களுக்கான சிந்தனையை முன்னேற்றுவதும், மனிதநேயத்தை, அன்பை,நேசத்தை,பண்பை, வளர்த்திருப்பதுமாக இருந்தால் அது மக்களுக்கான படம்.
மக்களுடைய சிந்தனையை மலிவான அளவிற்கு கீழ்மைப்படுத்தி, அசிங்கப்படுத்தினால் அது குப்பை படம் தான். தமிழில் வருகிற படங்கள் பெரும்பாலும் எந்த ரகத்தை சேர்ந்தவை என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

அருமை உண்மையாய் உரக்க சொன்னீர்
ReplyDelete