சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 26 February 2025

 அய்யன் வள்ளுவனுக்கு

ஆடைகள் நிறமாற்றி

இடையே பூனூலிட்டு

நீற்றுபட்டையிட்டு

அலங்கோலப்படுத்தியதில்

வருத்தமில்லை எமக்கு...


அய்யரா, அய்ங்காரா என

ஆவேசமாய் பூசலிட்டு

 இடையே வடகலையா

தென்கலையா என

அவரையும் இழுத்து

அசிங்கப்படுதிடாதீர்...


பிறக்கும் எல்லா

உயிருக்குமென

உலகுக்கு உரைத்திட்ட

உத்தமரை நாளை

சாதிச்சண்டையில்

சிக்கவிட்டுடாதீர் மூடர்கள்...


மதத்தால் ஒன்றெனக்கூறி, 

மக்களை பிளவுபடுத்தி

உள்ளுக்குள் ஓராயிரம் சாதியென

ஓயாமல் மோதவிடும் மூடரே.. 

விட்டுவிடும் எம் வள்ளுவரை

சனாதன சாக்கடையில் இழுத்திடாமல்..... 

1 comment:

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...