சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 26 February 2025

வள்ளுவனுக்கு காவியுடையா

 அய்யன் வள்ளுவனுக்கு

ஆடைகள் நிறமாற்றி

இடையே பூனூலிட்டு

நீற்றுபட்டையிட்டு

அலங்கோலப்படுத்தியதில்

வருத்தமதிகமில்லை எமக்கு...


அய்யரா, அய்ங்காரா என

ஆவேசமாய் பூசலிட்டு

 இடையே வடகலையா

தென்கலையா என

அவரையும் இழுத்து

அசிங்கப்படுதிடாதீர்...


பிறப்பொக்கும் எல்லா

உயிருக்குமென

உலகுக்கு உரைத்திட்ட

உத்தமரை நாளை

சாதிச்சண்டையில்

சிக்கவிட்டுடாதீர் மூடர்கள்...


மதத்தால் ஒன்றெனக்கூறி, 

மக்களை பிளவுபடுத்தி

உள்ளுக்குள் ஓராயிரம் சாதியென

ஓயாமல் மோதவிடும் மூடரே.. 

விட்டுவிடும் எம் வள்ளுவரை

சனாதன சாக்கடையில் இழுத்திடாமல்..... 

1 comment:

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...