சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 15 February 2025

நாலடியார்

 நட்பாராய்தல்

நாய்க்காற் சிறுவிரல்போ ன‌ன்கணிய ராயினு

மீக்காற் றுணையு முதவாதார் நட்பென்னாஞ்

சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டுஞ் செய்விளைக்கும்

வாய்க்கா ல‌னையார் தொடர்பு. (218)

நாய் கால்- நாயின் கால்களிலுள்ள. நன்கு அணியர்-மிக நெருங்கினவர். ஈ கால் துணையும்-ஈயினது காலினளவும், என்னாம்-என்ன பயனைச்செய்யும்? சேய்த்து ஆனும்- நெடுந் தூரத்திலிருப்பினும். செய்வினைக்கும்-கழனியைப் பயிர் விளையும் படிச் செய்கின்ற, வாய்க்கால் அனையர் தொடர்பு-வாய்க்காலை ஒத்தவரது நட்பு.

நாயினுடைய கால்களை பார்த்திருக்கிறோம். கடைசியில் இருக்கக்கூடிய சிறு விரல்கள் மிக நெருக்கமாய் இருக்கும். அது போல சிலருடைய நட்பு மிகவும் நெருக்கமாய் இருக்கும். நாம் ஈக்களை பார்த்திருக்கிறோம் . அதனுடைய கால்கள் மிகவும் சிறியவை. அதனுடைய பாதமோ காண இயலாது. அந்தப் பாதத்தின் அளவு கூட உதவி செய்யாதவருடைய நட்பு இருந்தால் நமக்கு என்ன பயன்?

வயல்கள் எங்கோ இருக்கும். வயல்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமான குளங்களும், ஏரிகளும், கிணறும், ஆறுகளும் வேறு இடத்தில் இருக்கும். அந்த வயலுக்கு தேவையான நீரினை வாய்க்கால்கள் கொண்டு செல்லும். அதனால் அந்த வாய்க்கால்களுக்கு எந்த பயனும் இல்லை. இருந்தாலும் வயலுக்கு உதவும் வாய்க்கால்களை போன்ற சான்றோர்கள் உடைய நட்பே என்றும் நிலையானது, சிறந்தது... 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...