சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 24 February 2025

கழிவிரக்கம்

 அள்ள அள்ள குறையா

   அருந்தமிழ் பாடல்பல

    ஆயிரம் ஆயிரமாயிரமாய்

      எமக்கீந்து சென்றனர்

         எம் முன்னோர் பலர்...


இமயம் போல் எம்முன்

  இருக்கும் இலக்கியத்தை

   சிறிதேனும் பருகாமல்

    சிறுபிள்ளைத்தனமாய்

      கழித்தேன்வாழ்நாளை வீணே...


பால பருவம் முதன்

   பதினாண்காண்டுகள்

     போய் மீதமுள்ள

       அய்ம்பதாண்டுகளும்

         அழிந்தது வீணே....


கலைபல கற்க வைத்து

  உலகை உணர வைத்து

     வாழ்வளித்த தமிழை

       வணங்குதற்கு மனமின்றி

       வீணடித்தேன் வாழ்நாளை....


 எஞ்சி இருக்கும்

   சிறுகாலமேனும்

    இயன்றவரை கற்றாலும்

     பருகிடுவேனோ

        சிறு துளியேனும்...

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...