அய்யன் வள்ளுவனுக்கு
ஆடைகள் நிறமாற்றி
இடையே பூனூலிட்டு
நீற்றுபட்டையிட்டு
அலங்கோலப்படுத்தியதில்
வருத்தமில்லை எமக்கு...
அய்யரா, அய்ங்காரா என
ஆவேசமாய் பூசலிட்டு
இடையே வடகலையா
தென்கலையா என
அவரையும் இழுத்து
அசிங்கப்படுதிடாதீர்...
பிறக்கும் எல்லா
உயிருக்குமென
உலகுக்கு உரைத்திட்ட
உத்தமரை நாளை
சாதிச்சண்டையில்
சிக்கவிட்டுடாதீர் மூடர்கள்...
மதத்தால் ஒன்றெனக்கூறி,
மக்களை பிளவுபடுத்தி
உள்ளுக்குள் ஓராயிரம் சாதியென
ஓயாமல் மோதவிடும் மூடரே..
விட்டுவிடும் எம் வள்ளுவரை
சனாதன சாக்கடையில் இழுத்திடாமல்.....
அருமை
ReplyDelete