வெம்புலியே வாளெடு!
நம்மை, நம் நாட்டை
நலம் பல பேணி
நாளும் காப்பது மொழி!
நல்லன காட்டித் தீயன களைய
உதவும்; நமக்கது விழி!
செம்மைத் தமிழ் மொழி
சீர்குலை வதனால்
செந்தமிழ் நாடுறும் பழி!
சிற்றறி வுடையோர் இந்தியைப் புகுத்தச்
சீறுவர்; நீயதை ஒழி!
வெம்மைக் கொடும் போர்
விளையினும், மொழிக்கென
வெற்புத் தோளினைக் கொடு
வீணரை வீழ்த்து! வெற்றியை வாழ்த்து!
வெம்புலியே வாளெடு!
இம்மை மறுமை யென்
றேபல பிதற்றி
இழிவார் பலர்; அதை விடு!
இழப்பது வாழ்வே என்னினும் அவர்மொழி
ஏற்பது தீது! உயிர் விடு!
பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1959ல் முழங்கியது.
No comments:
Post a Comment