சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 12 March 2025

வெம்புலியே வாளெடு!

  வெம்புலியே வாளெடு!


நம்மை, நம் நாட்டை

நலம் பல பேணி

நாளும் காப்பது மொழி!

நல்லன காட்டித் தீயன களைய

உதவும்; நமக்கது விழி!


செம்மைத் தமிழ் மொழி

சீர்குலை வதனால்

செந்தமிழ் நாடுறும் பழி!

சிற்றறி வுடையோர் இந்தியைப் புகுத்தச்

சீறுவர்; நீயதை ஒழி!


வெம்மைக் கொடும் போர்

விளையினும், மொழிக்கென

வெற்புத் தோளினைக் கொடு

வீணரை வீழ்த்து! வெற்றியை வாழ்த்து!

வெம்புலியே வாளெடு!


இம்மை மறுமை யென்

றேபல பிதற்றி

இழிவார் பலர்; அதை விடு!

இழப்பது வாழ்வே என்னினும் அவர்மொழி

ஏற்பது தீது! உயிர் விடு!


பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1959ல் முழங்கியது. 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...