சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 28 March 2025

நாகரீகமானவர்கள்






 நேர்மையும்

 நன்மையும்

 அனாதைகளாயின...


உண்மையிங்கே

 ராகமிழந்த

பாடல்களாயின..


மனித மாண்புகள்

மதிப்பிழந்து

 போயினர்..... 


பகட்டும் சூதும்

 பணிவுக்கு

 இலக்கணமாயின...


பொய்மையும்

 புளுகுகளும்

 மெய்ப்பொருளாயின...


கபட வேடதாரிகள்

கடவுளாகவே

மாறிப்போயினர்....


மகிழ்ந்து கொள்வோம்

நாமெல்லாம்

 நாகரீகமானவர்கள்..

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...