சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 28 March 2025

நாகரீகமானவர்கள்






 நேர்மையும்

 நன்மையும்

 அனாதைகளாயின...


உண்மையிங்கே

 ராகமிழந்த

பாடல்களாயின..


மனித மாண்புகள்

மதிப்பிழந்து

 போயினர்..... 


பகட்டும் சூதும்

 பணிவுக்கு

 இலக்கணமாயின...


பொய்மையும்

 புளுகுகளும்

 மெய்ப்பொருளாயின...


கபட வேடதாரிகள்

கடவுளாகவே

மாறிப்போயினர்....


மகிழ்ந்து கொள்வோம்

நாமெல்லாம்

 நாகரீகமானவர்கள்..

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...