நேர்மையும்
நன்மையும்
அனாதைகளாயின...
உண்மையிங்கே
ராகமிழந்த
பாடல்களாயின..
மனித மாண்புகள்
மதிப்பிழந்து
போயினர்.....
பகட்டும் சூதும்
பணிவுக்கு
இலக்கணமாயின...
பொய்மையும்
புளுகுகளும்
மெய்ப்பொருளாயின...
கபட வேடதாரிகள்
கடவுளாகவே
மாறிப்போயினர்....
மகிழ்ந்து கொள்வோம்
நாமெல்லாம்
நாகரீகமானவர்கள்..
No comments:
Post a Comment