கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தைத் தொடர்ந்த நாள்: மே 9- 1502...
கொலம்பஸ்.
கொலம்பஸ் ஒரு கடல் பயணி, வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார்.
கொலம்பஸ் ஒரு கடல் பயணி, வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். இவர் 1502-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி தனது கடைசி பயணத்தை மேற்கொண்டார்.
வரலாற்றில் இன்று மே.9.
அறிவியல் களத்தில் நோபல் பரிசை வென்ற முதல் அமெரிக்க விஞ்ஞானியான ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன் (Albert Abraham Michelson) நினைவு தினம் இன்று...
போலந்து நாட்டின் ஸ்டெரால்னோ என்ற ஊரில் யூதக் குடும்பத்தில் (1852) பிறந்தவர். இவர் பிறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு, குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. தந்தையின் வர்த்தகம் காரணமாக, நியூயார்க், வர்ஜீனியா, நெவாடா, சான்பிரான்சிஸ்கோ என பல இடங்களில் வசித்தனர்.
சான்பிரான்சிஸ்கோவில் அத்தை வீட்டில் தங்கி, பள்ளிப் படிப்பை முடித்தார். இவரது அறிவாற்றல், அறிவியல் ஆர்வத்தை உணர்ந்த பள்ளி ஆசிரியர், சோதனைக் கூடத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். பின்னர், அவரது ஆலோசனைப்படி அமெரிக்க கடற்படை அகாடமி சிறப்புப் பிரிவில் 4 ஆண்டுகள் பயின்றார்.
அங்கு ஒளியியல், வெப்பவியல், பருவகாலவியல், ஓவியக் கலை பயின்றார். 1873-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2 ஆண்டுகள் இயற்பியல், வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1883-ல் கிளீவ்லேண்டில் கேஸ் ஸ்கூல் ஆஃப் அப்ளைடு சயின்ஸ் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
பெர்லின், பாரீஸில் பயந்து முதுகலைப் பட்டம் பெற்றார். 1889-ல் கிளார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1892-ல் தொடங்கப்பட்ட சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு தொடங்கப்பட்ட இயற்பியல் துறையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஓய்வு பெறும்வரை பணியாற்றினார்.
அமெரிக்க குடியுரிமை பெற்றார். இயற்பியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். ஒளியின் வேகத்தைக் கண்டறியும் ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினார். 'குறுக்கீட்டுமானி' (இன்டர்ஃபெரோமீட்டர்) என்ற எளிய கருவியை வடிவமைத்து, ஒளியின் வேகத்தை துல்லியமாகக் கணக்கிட்டார்.
ஒளியின் வேகம் அடிப்படை மாறிலி என்பதை ஆய்வு மூலம் நிறுவினார். குறுக்கீட்டுமானியைக் கொண்டு, 'ஆல்பா ஆரியன்ஸ்' என்ற விண்மீன் விட்டத்தை அளந்து கூறினார். பல்வேறு அறிவியல் இதழ்களில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டன.
பிரபஞ்சம் முழுவதும் திரவ, வாயு நிலைக்கு இடைப்பட்ட 'ஈதர்' என்ற ஊடகம் பரவியுள்ளதாகவும், அதன் வழியாகவே ஒளிச் செல்வதாகவும் அதுவரை ஊடுருவுகிறது. அறிவியலாளர்கள் கருதியது தவறு என்பதை மார்லி என்ற விஞ்ஞானியோடு இணைந்து நிரூபித்தார். இது 'மைக்கேல்சன் - மார்லி ஆய்வு' என்பது புகழ்பெற்றது.
அமெரிக்க இயற்பியல் கழகத் தலைவராக 1900-ல் நியமிக்கப்பட் டார். ஒளியியல், நிறமாலையியல், வானிலை குறித்த இவரது ஆய்வுகளுக்காக 1907-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதன்மூலம் அறிவியல் களத்தில் நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை பெற்றார்.
மேத்யூகி பதக்கம், காப்ளே பதக்கம், பிராங்க்ளின் நிறுவனத்தின் எலியட் கிரைசன் பதக்கம், தேசிய அறிவியல் கழகத்தின் டிரேப்பர் பதக்கம், ராயல் வானியல் கழகத்தின் தங்கப்பதக்கம் உட்பட பல்வேறு பரிசுகளைப் பெற்றார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
மவுன்ட் வில்சன் வானியல் ஆய்வு மையத்தில் இணைந்து பணியாற்றினார். இறுதிவரை ஆய்வுகளில் ஈடுபட்டு அறிவியல் களத்தில் மகத்தான பங்களிப்புகளை வழங்கிய ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன் 79-வது வயதில் (1931) மறைந்தார்.
வரலாற்றில் இன்று.மே.9.
பெர்டினாண்ட் மோனார் பிறந்த தினம் இன்று...
பிரான்ஸ் நாட்டின் கண் மருத்துவரான பெர்டினாண்ட் மோனயர் புகழ்பெற்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு அணியப்படும் கண்ணாடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது டையாப்ட்டர் (டையோப்டர்) அல்லது தையோத்தர் என்ற அளவை உருவாக்கியவர்., இதுதவிர, மோனயர் விளக்கப்படம் எனும் பார்வை திறனை அறிய உதவும் எழுத்துக்கள் அடங்கிய படத்தை உருவாக்கியவரும் இவர்தான்.
மே 9,1836 ல் மோனார் பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவர், கண் தொடர்பான ஆராய்ச்சி மருத்துவராக வந்தார், இவரின் கண்டுபிடிப்புகள் 140 மேலும் தொடர்ந்து இன்று நவீன உலகத்திலும் அதாவது மோனயர் சார்ட்டை அடிப்படையாக கொண்டே பார்வைதிறன் மற்றும் டையப்ட்டர் எனப்படும் கண்ணாடிஅளவுகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஃபெர்டினாண்ட் மோனயர் ஜூலை 11 ,1912இல் தனது 76ஆவது வயதில் காலமானார்.
No comments:
Post a Comment