சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 21 May 2025

உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம்.

கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும், பழக்கவழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. 

இதன்மூலம் ஒரு குழுவின், இனத்தின், நாட்டின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

ஐ.நா.பொதுச்சபை 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. 

அதன்மூலம் மே 21ம் தேதியை உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்றம் தினமாக அறிவித்தது.

உலக கலாச்சார பன்முகத்தன்மை தினமான மே 21 ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சர்வதேச விடுமுறையாகும். இந்த நாள் பன்முகத்தன்மை மற்றும் உரையாடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, மேலும் கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக செயல்படுகிறது. 

இந்த தினத்தின் முக்கிய நோக்கம்: 

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களை மதித்து, கலாச்சார பன்முகத்தன்மையை கொண்டாடுவது.

கலாச்சார உரையாடலைத் தூண்டுவது மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது.

கலாச்சார பன்முகத்தன்மையை அழிப்பதைத் தடுப்பது மற்றும் கலாச்சார சொத்துக்களைப் பாதுகாப்பது.

ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதையும், கலாச்சார வேறுபாடுகளையும் பாராட்டுவதையும் ஊக்குவிப்பது.

இந்த நாள், 2001 இல் ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலைகள் அழிக்கப்பட்ட சம்பவத்தின் விளைவாக, கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கு, கலாச்சாரம் உரையாடலைத் தூண்டுவதற்கும், கலாச்சார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு சர்வதேச விடுமுறையாக அங்கீகரிக்கப்பட்டது. 

இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்கள் இடையே நல்லிணக்கத்தையும், புரிதலையும் மேம்படுத்துவதற்கு, கலாச்சாரம் பன்முகத்தன்மையை மதிப்பதற்கு ஒரு முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. 

இன்றைய இந்நாளின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். ஏனெனில் சகிப்புத்தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது. மத, இன துவேஷங்களினால் அழித்து நாசமாக்கப்பட்ட மத வழிபாட்டு தலங்கள் எத்தனையோ.. 

அதே போல இனதுவேசங்களினால், கலாச்சார துவேசங்களினால் மொழி துவேஷங்களினால் இதுவரை இந்த உலகம் சந்தித்துள்ள பேரழிவுக்கு எல்லையே இல்லை. 

மத, இன, மொழி வெறுப்புணர்வை வேரறுப்போம்..

கலாச்சார பன்முகத் தன்மையினை பாதுகாக்க உறுதியேற்போம்.... 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...