மலைகளை
குடைந்தோம்,
துண்டாடினோம்..
மரங்களை
வெட்டினோம்..
மண்ணை
தளர்த்தினோம்..
தன்மையை
மாற்றினோம்...
சரிவான
சாலையமைத்தோம்
வளர்ச்சி என்றோம் அதை..
இயற்கையை
சீரழித்தது நாம்.. அதன்
முனுமுனுப்பை
புறக்கனித்தோம்...
சீறியபோதோ
கதறுகின்றோம்...
மலை சரிந்தபோது,
இயற்கைப் பேரழிவென
வெட்கமின்றி மொழிந்தோம்....
மாறிவிடவில்லை
இயற்கை
ஒரே நாளில்...
காத்திடாவிடிலோ
கானாமல்
போய்விடும்
பூவுலகு...

No comments:
Post a Comment