இரு மொழிக் கொள்கை வேண்டாம்
மும் மொழி தான் வேண்டுமென
மூர்க்கமாய் உரைத்திடும்
எம் குலத்தின் துரோகிகளே
இயம்பிடுங்கள் எமக்கு...
அருங்கலைகள் ஆயிரம்
அறம் பொருள் இன்பமென
அத்தனையும் போதித்து
அறிவியலையும் போதிக்கும்
அருந்தமிழ் இருக்கையில்...
அகிலமெங்கும் பரவி
அறிவியலும் அரசியலும்
நல்லிலக்கியமும் தந்தெமை
அவனியெங்கும் உலவ விடும்
ஆங்கிலம் இருக்கையில்...
புராணக் குப்பைகளையும்
அறிவுக்கொவ்வா கதைகளையும்
அள்ளிவிட்டு மூடராக்கும்
அமரராகிப் போன
ஆரிய மொழி எமக்கெதற்கு....
ஆரியத்தோடு உருது
கலவி கொண்டும்
இந்திய மொழிகள் பல
விழுங்கி யெமை அடிமையாக்க
துடித்திடும் இந்தி எமக்கெதற்கு... .
அருமை...போர்ப்பரணி தொடரட்டும்!
ReplyDelete